Natarajar Pathu | நடராஜர் பத்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 авг 2021
  • #lordshiva #shiva #Ohm #Sivan
    பாடல்: 1
    மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,
    மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
    பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
    பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
    பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
    புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
    எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன்,
    ஈசனே சிவகாமி நேசனே! யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே...
    பாடல் : 2
    மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
    மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
    கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
    குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
    ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
    நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
    வினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை, விருதோடு ஆடி வருவாய்
    ஈசனே ...
    பாடல் : 3
    கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
    காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
    உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
    உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
    தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
    தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
    இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
    ஈசனே ...
    பாடல் 4
    வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
    பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
    அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
    அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
    கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
    கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
    என்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
    ஈசனே ...
    பாடல் 5:
    நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
    நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
    சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
    தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
    விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
    வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ
    இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை
    ஈசனே ...
    பாடல் 6:
    வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
    வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
    மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும் மூர்க்கனேன் முகடாகினும்
    மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும்
    பழியெனக் கல்லவே தாய்தந்தைக்
    கல்லவோபார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
    பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
    என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
    ஈசனே ...
    பாடல் : 7
    அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
    அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
    முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
    முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்றுஉணர்வனோ
    தன்னை நொந்தழுவனோ உன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
    தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ
    இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
    ஈசனே ...
    பாடல் : 8
    காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
    கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
    தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லையென்றனோ
    தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
    வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
    வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
    ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
    ஈசனே...
    பாடல் : 9
    தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
    தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
    சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன,
    சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
    ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ
    இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
    யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
    ஈசனே ...
    பாடல் 10 :
    இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ
    இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
    என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன்
    செய்கைதானோஇருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
    உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங்
    கெடுவனோ,ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
    என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்
    ஈசனே ...
    பாடல் : 11
    சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை,
    சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
    பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
    பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
    என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்கசக்கி,
    கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி
    சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்
    ஈசனே ...

Комментарии • 500

  • @sridevi6820
    @sridevi6820 2 месяца назад +26

    இந்தப் பாடலை எழுதியவருக்கும் இந்தப் பாடலை பாடியவர் இருக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @duraisamy8295
    @duraisamy8295 4 месяца назад +12

    இப்பதிவில் இப்பதிகத்தை எழுதியவருக்கும் பாடியவருக்கும் எம் அண்ணாமலை ஈசனை நினைத்து பாடியதற்கு கோடான கோடி வாழ்த்துக்கள்... நன்றி நன்றி நன்றி.....

  • @maheshauthi5617
    @maheshauthi5617 6 месяцев назад +5

    இந்தபாடல்.கேட்கும்.போது.கண்ணீர்.பெருகுகிறது.ஒம்.நமசிவாய

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 8 месяцев назад +12

    இது என்ன பதிகம் என்னை‌ இறைவனிடம் கொண்டு சேர்த்து விடுகின்றன இதனை கேட்கின்ற ஒவ்வொருவரும் இப்பிறவி முப்பறவிகளில் பாவங்கள் தொலைந்து இனி பிறவி இல்லா பெரும் பேற்றினை அடைவது உறுதி
    ஈசனே‌ சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே
    ஓம் நமச்சிவாயா

  • @rathna9267
    @rathna9267 Год назад +22

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னையே மறந்து விடுவேன் இப்பாடலை தினமும் ஒரு முறையாவது கேட்பேன்

  • @ramaniguna5494
    @ramaniguna5494 11 месяцев назад +6

    ஈசணே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே ஒம் நமசிவாய நமக

  • @agsakuntala3577
    @agsakuntala3577 5 месяцев назад +11

    அப்பப்பா என்ன ஒரு அற்புதமான பாடல்

  • @solapandi9567
    @solapandi9567 Год назад +20

    நடராஜர் பத்து பாடல் மிகவும் அருமை

  • @SankarSankar-ot1bl
    @SankarSankar-ot1bl Год назад +26

    என்ன தவம் செய்தாரோ
    பாடலை பாடினார். மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது. எல்லாம் சிவமயம்

    • @pavangundu4356
      @pavangundu4356 Год назад

      హలో గుడ్ మార్నింగ్ బ్రదర్ నాకు తమిళ్ రాదు కొంచెం ఈ పాటని తమిళ్ లో వ్రాయండి నేను గూగుల్లో ట్రాన్స్లేషన్ చేసుకొని చదువుకుంటాను ప్లీజ్ పాటకు అర్థం నాకు తెలియదు

  • @haripriyaamurugan3439
    @haripriyaamurugan3439 4 месяца назад +12

    பாடலை கூட சேர்ந்து படிக்க படிக்க கண்கள் ததும்பி விட்டது
    நன்றி ஈசனே
    ஓம் நமசிவாய
    🙏🙏🙏

  • @kalaiarasip2408
    @kalaiarasip2408 9 месяцев назад +27

    மன அமைதியுடன் ஓர் இடத்தில் அமர்ந்து இப்பாடலை கேட்கும்போது வாழ்க்கை என்ன என்பதை அறிந்துக் கொண்டேன்.
    இப்பாடலை எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர் கசியும் எனக்கு
    யாரிடமும் கேட்க முடியாது இவ்வளவு உரிமையாக இறைவனை தவிர...
    🙏 சிவாய நம🙏

  • @__speed__3699
    @__speed__3699 Год назад +22

    என் குறைகள் யார்க்குறைப்பேன் ஈசனே சிவகாமி நேசனே

  • @kavithab2967
    @kavithab2967 Год назад +16

    மிகவும் அழகான பத்து அருமை யான வரிகள்

  • @VijayaMahesh-po1kc
    @VijayaMahesh-po1kc Месяц назад +2

    தென்ளானுடைய சிவனே போற்றி
    என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @manikandanram7229
    @manikandanram7229 9 месяцев назад +6

    பிறவி பயன் அடைந்தேன் இனி பிறவா வரம் வேண்டும் என் அப்பனே 🔱🔱🔱

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 6 месяцев назад +2

    அருமை❤இனிமை

  • @kanniyammalk9889
    @kanniyammalk9889 Год назад +9

    ஈடு இணை யற்றஎந்தையின் பாடல்வரிகள் சிந்தையை மயக்கும் இசை நெகிழ்கிறது உள்ளம்

  • @kobika287
    @kobika287 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @meenakshis4738
    @meenakshis4738 10 месяцев назад +80

    பாடலுக்கும் பாடியவர் க்கும் கோடி கோடி நமஸ்காரம்

  • @kobika287
    @kobika287 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    💓🙏🙏💓💓💓💓🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaishudurai9245
    @vaishudurai9245 6 месяцев назад +4

    தெய்வத்தை, நம் உறவாக எண்ணி, உரிமையோடு கோபப்பட்டு, ஒருமையில் திட்டி, என பாடும் பாடல்கள் அனைத்துமே நம் உள்ளத்தை உணர்த்துவது போல் இருக்கும். இவை " நிந்தா ஸ்துதி " எனப்படும். என்ன நடக்கிறது என்றே அறியாமல், கண்ணீர் பெருக இறைவனிடம் ஒன்றி விடுவோம். இப்பதிகத்தை ப்ரதோஷ வேளையில் படிக்கலாம். ஓம் ஸ்ரீதீன தயாளனே நமஹ 🙏🙏🙏

  • @KarthiKarthikeyan-sk4jr
    @KarthiKarthikeyan-sk4jr 6 месяцев назад +2

    Om Shivaya namaha manathu thooimai adaikirathu manam amaithi adaikirathu.mikka nantri

  • @muneeswarimuthuraman4261
    @muneeswarimuthuraman4261 8 дней назад +1

    ஓம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்🙏 நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sridevi6820
    @sridevi6820 Год назад +34

    இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு மிகவும் கண்ணீர் வருகிறது இறைவா

  • @kobika287
    @kobika287 7 месяцев назад +2

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    💓🙏💓🙏🙏💓🙏💓🙏🙏🙏💓🙏💓🙏🙏💓💓💓💓💓🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓💓🙏💓💓💓🙏💓💓🙏🙏💓🙏💓🙏💓🙏💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varadhansundaresan9834
    @varadhansundaresan9834 9 месяцев назад +11

    மொழிக்கு உச்சரிப்பு உயிர்.
    பாடல் வாசிப்பு அருமை.
    இசையோ தேனாகி விட்டது.
    ஐம்புலனும் அடங்கியது.
    ஓம் சிவாயநம.

  • @beaconguards866
    @beaconguards866 8 месяцев назад +3

    🙏ஓம் நமசிவாய இந்த பாடலை கேட்க கேட்க மனம் அமைதி பெருகிறது இசையோ மிகவும் அருமை மனம் நிம்மதியடைந்தேன் இப்பாடலை பாடிய ஐய்யா மனங்கனிந்த நன்றிகள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏

  • @lathabalaraman2227
    @lathabalaraman2227 Год назад +13

    என் ஐயனே என் மகனுக்கு எப்பொழுது நல்ல நேரம் வரும் ஈசனே சிவகாமி நேசனே எனை ஆளும் ஈசனே ஐயனே தில்லைவாழ் நடராசா உலகை கட்டியாளும் ஈஷா உலகம் யாவையும் 7:46

  • @thansikatamizh2216
    @thansikatamizh2216 6 месяцев назад +2

    இந்த பாடலை இதுவரை 20 முறை கேட்டு விட்டேன் ஒவ்வொரு முறையும் அழுகை வந்தது பாடல் வரிகள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம சிவாய ❤

  • @sivaganeshtsivaji999
    @sivaganeshtsivaji999 Год назад +73

    என் அப்பன் சிவனே இந்த பாடலை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்து தனது அருள் தருவார் என்பது நான் கண்ட உண்மை நிலை

  • @GaneshGanesh-xf5ve
    @GaneshGanesh-xf5ve 11 месяцев назад +18

    ஓம் நமசிவாய இந்த பாடலை கேட்க கேட்க மனம் அமைதி பெருகிறது இசையோ மிகவும் அருமை மனம் நிம்மதியடைந்தேன் இப்பாடலை பாடிய ஐய்யா மனங்கனிந்த நன்றிகள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

    • @DevarajT.K
      @DevarajT.K 9 месяцев назад

      சில சிவ சிவனே

  • @Voic354
    @Voic354 Год назад +36

    அப்பப்பா.....இத்தனை நாள் இதை கேட்காமல் போனேனே.... நான் பாவி

    • @sornaiarjagadeeshwaran5973
      @sornaiarjagadeeshwaran5973 11 месяцев назад +4

      9:45 யாரும் பாவி இல்லை அன்பரே,தேடிக்கொண்டு இருந்தது இப்பொழுது கிடைத்தது என்று சந்தோஷப்படுங்கள

  • @sankarm53
    @sankarm53 2 года назад +27

    நடராஜர் பத்து....
    உண்டாகும் சம்பத்து...
    உனக்கில்லை ஆபத்து...
    தினமும் ஓது நீ சமத்து.

  • @muthulakshmis1314
    @muthulakshmis1314 10 месяцев назад +2

    மனதை வருடுகிறது.
    பாடலைக் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
    பாடகர் பாடிய விதம்
    Touching.

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Год назад +4

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை யான பாடல்🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @ramgkrv1026
    @ramgkrv1026 Год назад +14

    ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

  • @anandarengan4866
    @anandarengan4866 10 месяцев назад +13

    இப்பாடல் கேட்ககொடுத்து வைக்கணும் வாழ்க வளமுடன் 🌹🙏

  • @user-ib5ze3ct8p
    @user-ib5ze3ct8p 4 месяца назад +4

    🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺

  • @ajithgamingtamizhanyt
    @ajithgamingtamizhanyt Год назад +6

    சூப்பர் அருமை 2023 வருடம் சிவராத்திரி யில் கேட்டு மகிழ்ந்தேன்

  • @cartoonzone9103
    @cartoonzone9103 Год назад +22

    உண்மை அருமை..என் கண்ணிலும் நீர்...கேடக கேடக அருமை....இவ்வளவு நாள் கேளாதிருந்தது எத்துணை மடமை..

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 3 месяца назад +1

    Mariyathaum manamum kidaikka vendum andavane 🙏🙏🙏🙏🙏🫀🫀🫀🫀🫀

  • @gsundar5180
    @gsundar5180 9 месяцев назад +2

    இப்பாடலை நான் மனனம் செய்ய முயல்கிறேன்

  • @dhandapaniperiyasamy3309
    @dhandapaniperiyasamy3309 Год назад +16

    அருமை அருமை......
    தில்லை நடராஜனே
    போற்றி போற்றி.....
    குரல் வளம் நயம்
    அருமை.

  • @user-ke9di3gv4x
    @user-ke9di3gv4x Год назад +52

    அப்பனே இவ்வுலகு விட்டு உன் பாதம் பார்க்கும் நாள் என்றோ அப்பா அருள் செய் அய்யனே🕉🙏

    • @ushavivek5128
      @ushavivek5128 11 месяцев назад

      😊

    • @MohanM-rm9nz
      @MohanM-rm9nz 11 месяцев назад

      AQქ😊😊😊😊

    • @renukarenuka1396
      @renukarenuka1396 6 месяцев назад

      ஓம் நமசிவாயா

    • @jayakumar9861
      @jayakumar9861 4 месяца назад +1

      நன்று.. வந்த பணி கடமை முடிந்து விட்டால் ஆரோக்கியமாக இருக்கும் போதே கிளம்பி விடவேண்டும் 🎉

  • @pangajams7398
    @pangajams7398 Год назад +19

    உங்கள் குரல் மிகவும் அருமை, நான் தினமும் ஒரு முறை இப்பாடலை கேட்டு விடுவேன்

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Год назад +11

    ஓம் நமசிவாய வாழ்க...... நற்பவி.....

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 Год назад +40

    8:06 "இன்னும் என்ன பிறவி வருமோ" 😭😭😭😭🙏🏻🙏🏻..... அழுத்துவிட்டேன்.... என் அப்பனே ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 11 месяцев назад +4

    "பதினென் சித்தர்கள் போற்றி போற்றி போற்றி",,,,
    தனிப்பொருங்கருணை,,,,,
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி,,,

  • @bharathk4667
    @bharathk4667 6 месяцев назад +2

    தந்தை நீ மலடு தானே என்ற ஒரு வரியை தவிர்த்துருந்தால் நன்றாக இருந்திருக்கும்..மற்றபடி ஒரு குறையும் இல்லை..எல்லாம் வல்ல ஈசன் அருள்.இதுவும் ஈசன் விருப்பமோ என்னவோ..யாரறிவார்..

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Год назад +4

    ஈசனே சிவகாமி நேசனே எனையின்ற தில்லை வாழ் நடராஜனே ஓம் நமசிவாய

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Год назад +3

    என் உடல் ஆத்மா எல்லா ம் உன்காலடியில் இறையே😢

  • @padmapriyaraju6880
    @padmapriyaraju6880 Год назад +2

    Eesanae Appa en kanavar kudi suthamagae marakkavendum Appa OM NAMASHIVAYAE

  • @Thamilarasan-yi3di
    @Thamilarasan-yi3di Год назад +200

    கண்ணீருடன் அத்தனை பதிகங்களையும் மனப்பாடம் செய்துவிட்டேன் என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனை ஓம் நமச்சிவாயம் 🙏❤️✨✨

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Год назад +43

    ஆஹா இன்னும் 1000 வருடம் ஆனாலும் இந்த பாடல் அன்றைக்கும் பொருந்தும் ஓம் நமசிவய.🙏🙏🙏

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Год назад +30

    ஈசனே சிவகாமி நேசனே எனையின்ற தில்லை வாழ் நடராஜனே ஓம் சிவாயநம 🙏🙏🙏

  • @sathyamurthi5775
    @sathyamurthi5775 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஈசன் அடிபோற்றி எந்தை ஆளும் பரமன் அடி போற்றி போற்றி

  • @krishnanpn3078
    @krishnanpn3078 10 месяцев назад +4

    அற்புதமான பாடல் பொருள் நிறைந்த பாடல் ஓம் நமசிவாய

  • @balasundaram6101
    @balasundaram6101 Год назад +1

    ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் நடராஜப் பெருமானே போற்றி போற்றி அன்னை பார்வதி தாயே போற்றி நந்தி தேவனே போற்றி போற்றி🪔🪔💐💐💐🙏🙏🙏📿🔱🔱

  • @k.rdevadoss1016
    @k.rdevadoss1016 Год назад +20

    அவனருலலே அவன் தாள் வணங்கி சரணடைவோம்.ஓம் நமசிவாய.

  • @kalaivanimagadaline1705
    @kalaivanimagadaline1705 Год назад +18

    பாடல் மிகவும் அருமை.. உங்கள் குரல் வளம் கடவுள் கொடுத்த வரம் . ஓம் நமசிவாய 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Год назад +16

    இன்று ஆருத்ரா தரிசனத்தில் இப்பாடல் கேட்பது எங்கள் பாக்கியம். அருமையாக பாடியுள்ளார் திருச்சிற்றம்பலம்🌺🌺🌺

  • @Chozhan213
    @Chozhan213 Год назад +15

    🙏தமிழ் கடவுள் 🏹சிவனே 🌹போற்றி.. 🙏சரணம்..

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 Год назад +3

    அம்மை அப்பா நல்லுயிர்கள் அனைவரையும் காத்திடல் வேண்டும்...

  • @kanagarathnamk6100
    @kanagarathnamk6100 4 месяца назад +1

    அருமையான குரல் வளம்
    மனதுக்கு ஒரு அமைதி

  • @saravananslshreya7520
    @saravananslshreya7520 5 месяцев назад +2

    இந்த பாடலை கேட்க்கும்போது மனதே இலகுவானதாக உணர்கிறேன்...ௐ நமச்சிவாய

  • @Papanasam-fw8ci
    @Papanasam-fw8ci Год назад +18

    உணர்ச்சி மிக்க பாடல் வரிகள் பாடியவிதம் அருமை

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Год назад +2

    கடவுளை மறுக்கலாம் தனிப்பட்ட முறையில்...
    எந்த நம்பிக்கையும் இருக்கலாம்.
    பேருண்மை ஒன்றேயானது இங்கு இயற்கையின் காட்சியாக கவிநயத்தோடு எளிய நடையில்....
    இந்த பெரியோர்களின் தமிழ்....
    இன்றைய தலைமுறை இதையுணரும் அறிவு பெற வேண்டும்...சிவ சிவ சிவ சிவ

  • @venkatramanrenganathan8521
    @venkatramanrenganathan8521 Год назад +57

    தினமும் கேட்டு கேட்டு மனனம் ஆகிவிட்டது...பாடலும், இசையும், பொருளும் அற்புதமான அருமை 🌸

  • @govinthrajvikram
    @govinthrajvikram 8 месяцев назад +1

    எம் இறைவன் காலத்திற்கு ஏற்றவாறு எல்லா மீடியாக்களிலும் பரப்புமாறு நம்மை பணிகின்ற என்ன ஒரு அதிசயம் என்ன ஒரு விந்தை என் இறைவன் ஓம் நமச்சிவாய

  • @babaswami-lu8hs
    @babaswami-lu8hs Год назад +6

    நல்வாழ்வு

  • @NandaKumar-ry1ri
    @NandaKumar-ry1ri 10 месяцев назад

    நன்றி ஐயா
    நன்றி
    சிவாயநம

  • @G.vasanthaKumari-mx8fy
    @G.vasanthaKumari-mx8fy 12 дней назад

    மிகவும் அழகான பாடல்

  • @anandarengan4866
    @anandarengan4866 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @manir2938
    @manir2938 Год назад +25

    நற்றுணையாவது நமசிவாயமே சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் இந்த பாடலை இயக்கி இசை வடிவம் கொடுத்து பாடியவர்கள் அனைவரின் பொன்மலர் பாதங்கள் வணங்குகிறேன் கோடான கோடி நன்றிகள் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @valarmathiv1388
    @valarmathiv1388 11 месяцев назад

    நன்றி ஈசனே சிவகாமி நேசனே தில்லைவாழ் நடராசனே நன்றி

  • @rajamsankar1121
    @rajamsankar1121 Год назад +26

    திருச்சிற்றம்பலம். உங்கள் குரல் வளம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் பாடல் அருமை காதில் ஒளித்து கொண்டு இருக்கிறது

  • @Padmapriya830
    @Padmapriya830 4 месяца назад +1

    எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathabalaraman2227
    @lathabalaraman2227 Год назад

    ஈசனே எப்பொழுது என் மகனுக்கு நல்ல நேரம் வரும் என் ஈசனே ஐய்யனே

  • @RGH79315
    @RGH79315 Год назад +27

    தென்னாட்டுடைய சிவனைப் போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க

  • @Madhumitha-jy9ub
    @Madhumitha-jy9ub 2 года назад +9

    அருமையான. குரல்ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soundarshanthi3896
    @soundarshanthi3896 2 месяца назад

    🙏🙏Om Namashivayam yen appan allava 🙏🙏🙏❤️

  • @sundarivishnu
    @sundarivishnu 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய...
    இந்த இனிய பாடலை எழுதியவர்க்கும் இசையமைத்தவர்களுக்கும் பாடியவர்க்கும் என் மனமார்ந்த மாபெரும் நன்றிகள... வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்..
    ஈசனே சிவகாமி நேசனே
    எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே...
    ஓம் நமசிவாய

  • @sridevi6820
    @sridevi6820 Год назад +5

    இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடலை பாடியவர் குரல் மிகவும் அற்புதமாக உள்ளது மிகவும் நன்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Год назад +2

    Om Namah Shivaya Om Namah Shivaya🙏🙏🙏🙏🙏 Arumaiyana paadalgal

  • @RAAKESHN-tt7ze
    @RAAKESHN-tt7ze 4 месяца назад +1

    Easane en magan Udal ubaday sariyaga arul puriyavendum iraiva 🙏🙏🙏

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 Год назад

    Arumai omsivaa

  • @StarStar-ic8sc
    @StarStar-ic8sc 9 месяцев назад +3

    ஓம் ஸ்ரீ பகவான் அன்னை சரணம் 🙏🏻🌹🌷🌺🌸🥀

  • @gopalagopala1303
    @gopalagopala1303 Год назад +2

    தமிழ் வரிகளில், சில சிறு சிறு எழுத்துப் பிழைகள் திருத்தப்படவேண்டும்

    • @a.jayadevanjayadevan9015
      @a.jayadevanjayadevan9015 Месяц назад

      இவருநக்கீரர்குற்றம்கண்டுபிடிச்சிட்டாரு

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Год назад +20

    கேட்க கேட்க மனசுல கவலை மறைந்து நிம்மதியா இருக்கு... 🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏💐

  • @prabakarksat2724
    @prabakarksat2724 10 месяцев назад

    Om Namo Shivaya

  • @jothishri1645
    @jothishri1645 10 месяцев назад +1

    Om namachi shivaya om ❤️ love you dad Siva perumanae ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @muthuramakrishnan4548
    @muthuramakrishnan4548 Год назад +3

    .ஓம்சிவாயநமக

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 7 месяцев назад +1

    பாடல், மற்றும் பாடியவரின் குரல், இ சை அமைப்பு, மிக. அருமை. கேட்க இனிமை, நன்றிகள் பல.

  • @sridevi6820
    @sridevi6820 Год назад +72

    பாடலை கேட்பதற்கே மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்தப் பாடலைக் கேட்கிறேன்

    • @sprituallover9796
      @sprituallover9796 10 месяцев назад +1

      எதுக்கு புண்ணியம் செஞ்சீருக்கணும் இந்த படல கேட்டு உங்க வாழ்க்கையில் எதாவது மாற்றம் நடந்தது உண்டா

    • @saraswathyswaminathan3401
      @saraswathyswaminathan3401 10 месяцев назад

      ​@@vicksiva56l

    • @thangavelhari8502
      @thangavelhari8502 10 месяцев назад

      ❤f​@@vicksiva56o😮😮😮😮😅())😮😅😅😅😅))

    • @malasivasankar9575
      @malasivasankar9575 9 месяцев назад

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮

    • @vijayakumarvijay1026
      @vijayakumarvijay1026 9 месяцев назад

      5

  • @shivashangkareeshangkaree4064
    @shivashangkareeshangkaree4064 Год назад +4

    ஓம் நமச்சிவாய

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Год назад +5

    ஓம் சிதம்பரம் நடராஜர் சிவகாமி அம்பாள் போற்றி போற்றி
    ஓம் மகான் அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
    ஓம் மகான் திருமூலர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
    ஓம் மகான் அப்பர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
    ஓம் மகான் சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
    ஓம் மகான் சம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
    ஓம் மகான் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் மகான் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் மகான் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் மகான் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி போற்றி

  • @aiexraja243
    @aiexraja243 6 месяцев назад +1

    சிவ‌ சிவா❤

  • @Balakrishnan_64
    @Balakrishnan_64 9 месяцев назад +3

    இறைவன் அருள் இருந்தால் மட்டும் இப்பாடலை கேட்கவே முடியும் ஓம்நமசிவாய

  • @ramanraji7032
    @ramanraji7032 Год назад +3

    ஓம் நமசிவாய வாழ்க

  • @easvavijay7448
    @easvavijay7448 11 месяцев назад

    நன்றி நமசிவாய நன்றி