பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெற ஓதவேண்டிய கண் காட்டும் நுதலானும் திருவெண்காட்டுத் திருப்பதிகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #விதிமாற்றும் #விரிசடையான் #VV01
    #தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம் - யாழ்ப்பாணம்
    பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறுவதற்கும், வாதத்திறமை மற்றும் எழுத்தாற்றல் பெருகுவதற்கும் ஓதவேண்டிய திருவெண்காட்டுத் திருப்பதிகம் - கண் காட்டும் நுதலானும்
    திருமுறைப் பாடல் - மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார்
    மிருதங்கம் - சிவத்திரு.சண்முகலிங்கம் நாகராஜன்
    வயலின் - சிவத்திரு.ஜி.சுரேஷ்
    முன்னுரை - தென்னாடு ஆசிரியர் திருமுறைச் செல்வர் சிவமாதவன்
    பின்னணிப் படங்கள் - இராமேசுவரம் மற்றும் உத்தரகோசமங்கை
    www.thennadu.o...
    / thennadu
    தொடர்புகள்
    www.thennadu.o...

Комментарии • 9

  • @MaharajaM-sk5bz
    @MaharajaM-sk5bz Месяц назад

    ❤❤❤❤❤

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 3 года назад +2

    நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @vpsai47
    @vpsai47 8 месяцев назад

    Oknamashivaaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +4

    🙏🌹சிவ சிவ🌻🌿திருச்சிற்றம்பலம் 🌼🙏

  • @arunrranade
    @arunrranade 3 года назад +5

    பாடல் எண் : 1
    கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
    பாடல் எண் : 2
    பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
    பாடல் எண் : 3
    மண்ணொடுநீ ரனல்காலோ டாகாய மதியிரவி
    எண்ணில்வரு மியமான னிகபரமு மெண்டிசையும்
    பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
    பாடல் எண் : 4
    விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
    பாடல் எண் : 5
    வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர்
    ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.
    பாடல் எண் : 6
    தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தா னுறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
    பாடல் எண் : 7
    சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
    மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.
    பாடல் எண் : 8
    பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
    உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா னுறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
    பாடல் எண் : 9
    கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தா னெனவிவர்கள்
    ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
    வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்
    றுள்ளாடி யுருகாதா ருணர்வுடைமை யுணரோமே.
    பாடல் எண் : 10
    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
    பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
    றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.
    பாடல் எண் : 11
    தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே

  • @padminiganesan5156
    @padminiganesan5156 3 года назад +1

    சிவாய நம திருச்சிற்றம்பலம்
    கண்காட்டும் நுதலானும் கனல்காட்டும் சிவ சிவ🙏🙏🙏🌹

  • @sankarmadha6195
    @sankarmadha6195 3 года назад +1

    திருசிற்றம்பலம் 🙏🙏🙏

  • @sgsekar85
    @sgsekar85 3 года назад

    சிவ சிவ