எண்ணப்பதிகம் | சிவ.தாமோதரன் |தென்சேரி மலை ஆதீனத் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • எண்ணப்பதிகம்
    அ௫ளியவர்: மாணிக்கவாசகர்
    திருமுறை: எட்டாம்-திருமுறை-திருவாசகம்
    பாருரு வாய பிறப்பறவேண்டும்
    பத்திமை யும்பெற வேண்டும்
    சீருரு வாய சிவபெரு மானே
    செங் கமல மலர்போல்
    ஆருரு வாயஎன் னார முதேஉன்
    அடியவர் தொகை நடுவே
    ஓருருவாய நின் திருவருள் காட்டி
    என்னையும் உய்யக்கொண் டருளே. 1
    உரியேன் அல்லேன் உனக் கடிமை
    உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
    தரியேன் நாயேன் இன்னதென்று
    அறியேன் சங்கரா கருணையினாற்
    பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன்
    பெய்கழல் அடிகாட்டிப்
    பிரியேன் என்றென் றருளிய அருளும்
    பொய்யோ எங்கள் பெருமானே. 2
    என்பே உருகநின் அருள்அளித்துன்
    இணைமலர் அடி காட்டி
    முன்பே என்னை ஆண்டுகொண்ட
    முனிவா முனிவர் முழுமுதலே
    இன்பே அருளி எனையுருக்கி
    உயிருண் கின்ற எம்மானே
    நண்பே யருளாய் என்னுயிர் நாதா
    நின்னருள் நாணாமே 3
    பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
    உயர்ந்தபைங் கழல் காணப்
    பித்தில னேனும் பிதற்றில னேனும்
    பிறப்பறுப்பாய் எம்பெருமானே
    முத்தனை யானே மணியனை யானே
    முதல்வ னேமுறை யோஎன்று
    எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
    இனிப்பிரிந் தாற்றேனே. 4
    காணும தொழிந்தேன் நின்திருப் பாதம்
    கண்டு கண் களிகூரப்
    பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன்
    பின்னைஎம் பெருமானே
    தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந்
    தன்மைஎன் புன்மைகளால்
    காணும தொழிந்தேன் நீயினி வரி னுங்
    காணவும் நாணுவனே. 5
    பாற்றிரு நீற்றெம் பரமனைப்
    பரங்கரு ணையோடும் எதிர்ந்து
    தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை
    யளிக்குஞ் சோதியை நீதி யிலேன்
    போற்றியென் அமுதே என நினைந்
    தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
    ஆற்றுவனாக உடையவ னேஎனை
    ஆவஎன் றருளாயே. 6

Комментарии •