சொல் ஆழி வெண்சங்கே | Srilakshmi novels | tamil audio novels | tamil novels audiobooks|ramanichandran
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- • சொல் ஆழி வெண்சங்கே | S...
ஸ்ரீலக்ஷ்மியின், "சொல் ஆழி வெண்சங்கே"
‘சொல் ஆழி வெண்சங்கே’.. இது பழமையும், புதுமையும் கலந்த தெய்வீக மணம் கமழும் ஒரு புதினம். மஹாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களில் ஒன்று வலம்புரி சங்கு.. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தம் திருக்கரங்களில் வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுலம் வாசம் முடிந்ததும், குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், குருதட்சணையாக என்ன வேண்டும் என்ற கிருஷ்ணபரமாத்மாவுக்கு, அவரும் அவர் மனைவியும்.. தங்கள் ஒரே மகனை பஞ்சஜனன் என்ற அசுரன் கடலுக்குள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டிக்கொள்ள, அந்த கிருஷ்ணனும், அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டுக் கொடுக்க.. அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு பாஞ்சஜன்யம் என்று பெயராம். அப்பேற்பட்ட பவித்திரமான பாஞ்சஜன்ய மங்கள சங்கு ஒன்று ஒரு வைணவ குடும்பத்தில் கிடைத்துப் போற்றுவதற்குரிய பூஜைப்பொருளாய் வீற்றிருந்து அருள்பாலித்து, ஒரு சந்தர்ப்பத்தில் அன்னிய தேசத்திற்கு அதே குடும்பத்து சந்ததியின் ஒருவனால் பிரயாணம் செய்யப்பட்டு வேறு கலாசாரத்தில் இணைந்து பின்னர் அதை இழந்து அக்குடும்பமே குலைந்து போய்.. பிரிந்திருக்க.. மீண்டும் கைசேருமா என்று தவமாய்த் தவமிருந்து காத்திருக்கும்.. மகிழ்ச்சியும், சோகமும் என மாறி மாறி பிரதிபலிக்கும் ஒரு ‘பாஞ்சஜன்ய சங்கைப்பற்றிய’ கதைதான்.. ‘சொல் ஆழி வெண்சங்கே’.. ‘மதம் என்பதை விட மானுடமே சிறந்தது மனிதவாழ்வில்’ என்று சொல்லாமல் சொல்கிறது தர்மம் இருக்கும் இடத்தில் வீற்றிருக்கும் இப்பாஞ்சஜன்யம். கீதையிலும் அதைத்தான் சொல்லி இருக்கிறார் பகவான் கிருஷ்ணன். ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும்.. கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே’ என்று.. சுதந்திர இந்தியாவிற்கு முன்னும், பின்னும்.. அன்றும், இன்றும் என்று நடைபெறும் இக்கதை.. அக்காலகட்டத்தில் அன்றைய வாழ்வியல் இன்பங்களையும், சிக்கல்களை அலசி ஆராய்வதோடு, கதையோடு கீதை அறிவிக்கும் தர்ம மொழியான பாஞ்சஜன்யத்தின் பயணத்தையும் உயிர்போடு அரவணைத்துச் செல்கிறது. பிரச்சனைக்கு முதல் காரணமும் மனிதன்தான். முடிவும் மனிதனால்தான். ஆக முதலும், முடிவும் எல்லாமே அவனால்தானே.. சொல்லாழி வெண்சங்கும் ஆன்மிகமும், இன்றைய வாழ்வியல் நிதர்சனமும் சொல்லும் ஒரு சாதாரண, ஆசாபாசங்கள் நிறைந்த ஒரு மானிடனின் கதைதான். இது எங்களின் ஒரு புதிய முயற்சி என்று சொல்லலாம். நிச்சயம் வாசகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கைத்தான். எப்பொழுதும் போல படித்துவிட்டு, நிறைகுறைகளை உங்கள் கருத்துக்களாய்ப் பதிவு செய்ய வேண்டுகிறோம் தோழமைகளே.. என்றும் உங்கள் ஆதரவை நாடும்,
உங்கள்..
ஸ்ரீலஷ்மி சகோதரிகள்.
To read in kindle: a.co/d/0umolLD
#srilakshmiaudionovels
#tamilaudionovels
#tamil_novels
#ramanichandrantamilnovelsaudio
#ramnanichandrannovels
#rcnovelsaudio
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudiobooks
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudio
#tamilaudionovelstoread
#tamilnovelstory
#tamilstoriesaudio
#atmtamilnovels
#atmnovels
#tamilnovelsaudiobooks
nice story different
வணக்கம் தோழி நான் இப்போதுதான் உங்கள் தளத்தின் நாவல்கேட்கிறோன் இந்த கதையை கேட்க மனதிற்கு மிகவும் பிடித்துள்ளது ❤
Very nice and lovely and different story and thanks 🙏👍😅😅😅😅😅😅😅😅
❤குரல் சூப்பர் ❤
Good one.
Different story line.
Nice
❤❤❤🎉🎉🎉🎉👍👍👍👍good evening madam 🌹🌹🌹💕💕
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
,🎉🎉🎉❤❤❤
Good evening sister, enge rombanatkala unga voice kanom