சிவலிங்கம் இல்லாத சிவன் கோவில் | ஆவுடையார் கோவில் அதிசயங்கள் | Avudaiyar temple History
HTML-код
- Опубликовано: 27 фев 2024
- Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
Un Paatham Paninthom Official Tamil Devotional Video Song | Keshavraj Krishnan & Ramanan Rajendran
BGM Credits : Keshav Raj Krishnan
email. : kkeshavaraj@gmail.com
1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோயில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.
தேரின் சிறப்பு
இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருவாரூர், திருநெல்வேலி, ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரியத் தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.
50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.
50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர்
இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட கற்சிலைகள் இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும்போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும்.
வடக்கயிறு
இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும்.
உருவம் இல்லை - அருவம்தான்
தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும்.
பூத கணங்கள் கட்டிய கோயில்
ஆவுடையார் கோயிலை பூதகணங்கள் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கை
கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.
ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.
திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.
ஒரே கல்லிலான கற்சங்கிலி
கல் வளையங்களாலான சங்கிலி
இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.
மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்
இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.
உருவம் இல்லை
கொடி மரம் இல்லை
பலி பீடம் இல்லை
நந்தி இல்லை
இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை.
படைகல்
இங்கே மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்திலே படைகல் என்கிற ஒரு திட்டுக்கல் இருக்கிறது. இந்தத் திட்டுக்கல் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். இந்தத் திட்டுக்கல்லில்தான் 6 கால பூசைகளுக்கும் உரிய அமுதினை வடித்துப் படைத்து ஆற வைக்கிறார்கள். Развлечения
அழகாக எடுத்துரைத்த ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள்
😊
மிகவும் பொறுமையாக விளக்கிய பெரியவர் குருக்கள் ஐயாவிற்கு எனது வணக்கங்கள். நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.
விளக்கம் கொடுத்த பெரிய ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணக்குகின்றேன் 🙏🙏🙏 ஐயா அவர்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ என் அப்பன் ஈசன் அருள் புரியவேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
😅
Nalla manappaadam 😂
அது சரி அந்தப் பெரியவர் காற்று எடுப்பவரை வா போ என்று ஒருமையில் அழைக்கிறாரே இது எப்படி மற்றபடி ஒரு விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது
ஏதேதோ வீடியோக்கள் போட்டு லைக்குகளை அள்ளுறாங்க. ஆனால் அற்புதமான இந்த காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி. விளக்கம் தந்த பெரியவர் சுவாமிகளுக்கு நமஸ்காரம்.
அன்பும் நன்றிகளும் 🙏❤️
இந்த கோவில் எங்கே உள்ளது❓share this location pls
ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை தமிழ்நாடு
❤❤❤மிக்க நன்றி பெரியவரக்கு
@@MichiNetworkaaudaiyarkoil
நேரடியாக ஆலயத்திற்கு சென்று இருந்தாலும் இவ்வளவு தெளிவாக கண்டிருக்க முடியாது . பெரியவர் திரு ஜானகிராம் ஐயா அவர்களுக்கும் கானொலிகாட்சி எடுத்த சகோதரர் அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி
Nandrigal ❤️
உண்மைதான் நன்றி
உலகத்தின் மிகப்பெரிய பொக்கிஷம் மெய் மறந்து விட்டேன் நேரில் சென்று பார்க்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் babuji
Nandrigal ❤️🙏
@@MichiNetwork13:46 lt
Super
Temple located place
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டு ஆவுடையார் கோவில் பேருந்து கோவில் வாசலில் பஸ் நிறுத்தம்
அப்பா என்றாலே பெருமிதம் அப்பா பிறந்த ஊர் அதை விட சிறப்பு என்றும் தலை வணங்குகிறேன்.
நேரில் சென்று பார்த்தே ஆகவேண்டும்.
ஆவலை தூண்டிய அய்யாவிற்கும் பதிவேற்றிய உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.❤❤
இக்கோயில் கண்டு மெய்சிலிர்க்க வைத்தது. மாணிக்கவாசகர் பாதம் பணிவோம் . சிவன் அருளாள் இந்த பதிவு எங்கள் கண்ணில் பட்டது. மிகவும் அருமை 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🌺 திருச்சிற்றம்பலம்🌺
In the
ஆவுடையார் தரிசனம் பெற ஆவல் கொண்டேன் ❤
நல்ல முயற்சி அதிலும் பெரியவரின் அலட்டலில்லாத விவரனை அருமை
அனைத்து ஆலயங்களையும் இவ்வாறு ஆவணப்படுத்தலாம்
மெய் மறந்தேன் இறைவா🙏 ஐயா அவர்களின் விளக்கம் அழகு இவற்றை செய்த சிற்பியின் பாதம் படிக்கிறேன்🙏🙏🙏👌
❤️🙏
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் இறைவனை நேரில் கண்டேன் மனமிகசந்தோசமா உள்ளது👃👃👃👃
🩵🙏
அப்பப்பா.....எத்தனை சிறப்புகள்.கேட்க கேட்க மெய்சிலிர்க்கிறது. ஓம் நமசிவாய.
வீடியோ எடுத்த விதம் அருமை அருமை.குருக்கள் அளித்த விளக்கம் அருமை குருக்களுக்குமம்
இந்த தகவல் அனைத்தும் தெரிவித்ததற்கு அந்த தாத்தாவுக்கு மிகவும் இந்த இந்த சேனலுக்கு உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
❤️🙏
வெகு விரைவில் அந்த ஆலயத்தை சந்தித்து பார்க்க எனக்கு ஆண்டவன் எனக்கு அருள் புரிய வேண்டும்🙏🙏🙏
திரு மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் இத்திருத்தலத்தின் அம்சங்களை தெளிவாக விளங்கும் வண்ணம் சுட்டி காட்டினார் மிக்க நன்றிகள் ஐயா பயனுள்ள பதிவு மனம் நிறைவான பதிவு தந்தமைக்கு எங்கள் பாபு உங்களுக்கும் அன்புடன் நன்றிகள் 🙏👌👍
மிக்கநன்றிசிவாயநம
தமிழ் நாடு...capital of all ஆர்ட்ஸ் and architecture in the world and spiritual capital of India
வணக்கம் சகோ ஆவுடையார் கோயிலின் அழகிய சிற்பங்களையும் மாணிக்கவாசகரின் வரலாற்று சிறப்புகளும் ஐயாவின் வழிகாட்டுதலோடு தங்களின் படக்காட்சியின் வர்ணனையோடு சிற்பங்களின் அழகினை ரசிக்க வைத்தது மிக சிறப்பு. இதனுடன் யான் சிவத்திரு பாதத்தை பணிந்தோம் தங்களின் படக்காட்சி மூலம்
சார் உங்க வீடியோ எல்லாம் பார்த்துவிடுவேன் சாதாரணமா ஒரு சின்ன அர்த்தமில்லாத வீடியோவுக்கு வர வியூஸ் கூட இவ்வளவு துல்லியமா இவ்வளவு கேமரா டிரோன் கேமரா விசுவல் இவ்வளவு கிரேட்டா பண்ணியும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனது வருத்தமாக இருக்கிறது. 🫂🫂 அண்ணாமலையார் உங்களுக்கு துணை இருப்பார் 🎉❤
அர்தமில்லா வீடியோவில் கூட பல அர்த்தங்கள் ஒளிந்திருக்காலாம் ❤️🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
போன் கேமரா டிரோன் கேமரா இல்லை
🎉
ஐயா அருமை உங்க பேச்சுக்காக நீங்க சொல்றதுக்காக கோயிலை பாக்கணும் போல இருக்கு
நான் இந்த கோவிலுக்கு சென்று உள்ளேன். பல வீடியோக்களும் பார்த்துள்ளேன். இப்பதிவிட்டவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இங்ஙனம் சிவன்னடிமை...
அன்பும் நன்றிகளும் 🙏🩵
ஐயாவுக்கு மிகவும் நன்றி மிகப்பெரிய பொக்கிஷமான கோயில் மாணிக்கவாசகரின் பாதம் பணிவோம் ஓம் நமசிவாய
நேற்று ஆவுடையார் கோயில் சென்று சுவாமி, சிற்பங்களை பார்க்கும் பேறு பெற்றேன் . அற்புதமான ஆலயம் .
வாழ்வில் விவரம் தெரிவதற்கு முன்னே சென்ற தலம்...அறியா வயதில் கிடைத்த அறிய பொக்கிஷம் ....❤❤❤
எந்த கோவிலுக்கு போனாலும் அந்த கோவில் பற்றி தெரியாமல் வந்தோம் பார்த்தோம் என்று வந்து விடுகிறோம்.இந்த கோவிலில் இவ்வளவு விசயங்கள் இருக்கிறது.கோவிலை பற்றி விளக்கிய ஐயாவுக்கு நன்றி பல.
சிவன் அருளால் இந்த பதிவை காண நேர்ந்தது. விரைவில் ஆலய தரிசனம் செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும். இப்பதிவை வெளியிட்ட தங்களுக்கும் அருமையாக விளக்கம் தந்த பெரியாருக்கும் இறைவனுக்கும் கோடானுகோடி நன்றிகள்!
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அருமையான பதிவு நான் எத்தனையோ முறை அந்த வழியாக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்று உள்ளேன், ஆனால் இன்று தான் இந்த கோயிலைப் பற்றிய பதிவு எனக்கு தெரியவந்துள்ளது இதற கான கிடைத்த இது காண அதிக பாக்கியமாக கருதுகிறேன் சிவனுக்கு நன்றி,
அருமை அருமை.... அதுவும் அந்த சிவன் பாடலுடன் தொடங்கும் ஒளிக்கோவை. பாடலின் தொனி மாறும் சமயம், ட்ரோன் ஷாட் அருமை.
கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தையும் நலத்தையும் கொடுக்கணும் நான் இதுவரைக்கும் ஆவுடையார் கோயிலுக்கு போனதே இல்லை நீங்க காட்டுற காணொளி மூலமா நான் கண்டிப்பா அந்த இறைவனை நான் மனசார தரிசித்தேன் மாணிக்கவாசகர் அருள் இந்த காணொளி மூலமா இருந்து இருக்கு ரொம்ப நன்றிங்க வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என்று ஒரு வீடியோ பார்த்த நாள்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🩵🙏
சிறப்பு சிறப்பு. தமிழர்கள் கோவில் அனைத்தும், சிறப்பு.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
மிச்சி பாபு, நீங்கள்தான் எங்கள் மாணிக்கவாசகர். சிவ தரிசனம் பெற பாண்டியனை மிஞ்சுவிட்டோம்.
மெய்மறந்து போனது ஐயா.. ஒம் நமசிவாய
இந்தியாவில் இந்துவாக பிறந்ததற்கு பெருமை படுகிறேன் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமை பட வேண்டும் ❤
விளக்கம் கொடுத்த சிவனடியாருக்கு நன்றி
கோவில் தரிசனத்திற்கு நன்றிகள் பல கோடி.
தலைவரே ஆரம்பிச்சதும் தெரியல முடிச்சதும் தெரியல
😂
ரொம்ப அருமை
இதே மாதிரி மீனாட்சி அம்மன் கோவில் எடுத்து போடுங்க
சிறப்பு. ஓம் நமச் சிவாய நமக.
ஆங்கில விளக்கம் சேருப்பா ❤ வெளிநாட்டவருக்கும் போய் சேரும்
ஆவுடையார் ககோவிலில் இவ்வளவு கல் விசயங்கள் அடங்கிய சிற்பங்களா.அதுவும் அரிமர்த்தன பாண்டியன் சிலை.கிரேக்க அரேபிய ராஜஸ்தான் கற் குதததிரைகள்+நரி+நாய்+குதிரைமூன்றும் ஓரே தலை கொண்ட கல்வெட்டு.காட்டியதற்கு நன்றி
திரு ஆவுடையார் கோவில் சிற்பங்களும் பெரியவரின் வழிகாட்டுதலும் மிக மிக அற்புதம். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத விவரங்கள். அருள்மிகு. மாணிக்க வாசக நாயனாரின். ஆன்மீக உழைப்பு. எல்லாமே அதிசயத்தில். ஆழ்த்துகின்றன. மிக மிக நன்றி பாபு.
அற்புதமான பதிவு.
கோவில் வழிகாட்டியவர் பல்லாண்டுகள் வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம்
தெளிவான விளக்கம் மிகவும் பிடித்திறக்கிறது நன்றி 🎉
ஆவுடையார் கோவில் அற்புதங்கள் ,அதிசயங்களை மிக தெளிவாக விளக்கிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
நன்றிகள் ஐயா ❤️
நேரில் சென்று பார்த்த து போன்ற உணர்வு. நன்றி
மகிழ்ச்சி ஐயா நான் மூன்று ஆண்டுகள் முன்பு இங்கு இருக்கும் இறைவனை கானும் பாக்கியம் கிடைத்தது நாங்கள் ஐம்பது பேர் சென்றோம் ஐயா அவர்கள் தான் விளக்கினார் ஆனால் என்னுடன் வந்தவர்கள் இதை அனுபவிக்கவில்லை நான் இவற்றில் பாதி தான் அவரிடம் கேட்கும் கிடைத்தது நன்றி ஐயா
கோவிலின் சிறப்பை சிறப்பாக விளக்கம் அளித்த அறிவான பெரியவர்,
மிக அருமையான காணொளிப்பதிவு .
அற்புதமான விளக்கத்துடன்.
இந்த முயற்சிக்கு நன்றி!❤️❤️❤️👌👌👌🙏🙏🙏
மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள். அருமையான ஒளிப்பேழை. அண்டரன்டமாய் பறவையா.
❤️🙏
என்ன ஒரு அருமையான விளக்கம்
ஜானகிராமன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
அன்பே சிவம் இந்த அழகான பதிவிற்கு நன்றிகள் பெரியவர் சிற்பத்தின் பெருமைகளையும் அற்புதங்களையும் இன்றைய தலைமுறைக்கும் அல்லாமல் வருங்கால தலைமுறை இருக்கும் எடுத்துரைத்த அந்த உன்னதமான ஆத்மாவுக்கு கோடி நமஸ்காரங்கள் அன்பே சிவம்
சகோதரா வீடியோ பதிவுகள் வேகமாக சென்றதால் நேரில் சென்று பார்த்த மாதிரி இல்லை ஆகவே சிறிது மெதுவாக வீடியோ காட்சிகள் பதிவு செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தகவல் கூறிய ஐயா பெரியவர் சிறப்பாக கூறினார் நம் சுமையை நாம் தான் சுமக்க வேண்டும் என்று கூறியது எவ்வளவு ஒரு தத்துவம் ❤
ஐயா அருமையான விளக்கம் உங்கள் தன்னம்பிக்கையை என்ன வென்று சொல்ல உரிமையுடன் நகைச்சுவை கலந்த பேச்சி அருமை அருமை ஐயா
ஓம் நமசிவாயம்|நேரில் சென்று பார்த்தாலும் இவ்வளவு கூர்மையாக பார்த்திறுக்கமாட்டோம் மெய்மறந்து கோயிலின் உள்சென்று பார்த்த மாதிரி உள்ளது நன்றி-விவரித் அய்யா அவர்களுக்கும்/ தங்களுக்கும் நன்றி
அன்பும் நன்றிகளும் 🩵
என்ன ஒரு அருமையான காணொளி சொல்ல வார்த்தைகளே இல்லை எல்லாம் எங்க அப்பனின் சிவனின் திருவிளையாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙌
Nandrigal ❤️❤️❤️
நன்றிகள் பல நாங்கள் விரைவில் செல்ல வேண்டும் அத்திருத்தலத்திற்கு...சிவ சிவ..
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா.ராஜா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதுக்கு இதமாக ஒரு காணொளி
கோவில் வழிகாட்டி
ஐயா S..ஜானகிராமன் அவர்களின் விளக்கங்கள் அருமை
உங்கள் ஆன்மீக பயணங்கள் தொடரட்டும் காரைக்குடி சுற்று வட்டாரங்களில் உள்ள திருத்தலங்களையும் காணொளியாக தரவும்
என்றும் அன்புடன்
தமிழன் பா. ராஜா
29.02.2024
ஓம் நமசிவாய.. 🙏🏻🙏🏻🙏🏻
நேரில் சென்று கண்ட பலன் கிடைத்ததை போல் இருத்தது. மிகநன்றி..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Thanks bro i saw the temple with clear explanation by Gurukal. Lord shiva bless you all the way. Keep going 🙏🙏🙏
ஆலயத்தையும் அதில் உள்ள தெய்வங்களையும் முறையாக பராமரிக்க அடியேனின் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.இவை அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷம், பாதுகாப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை 🙏.
சரியாகச் சொன்னீர்கள்
அதிகாலை 3 மணிக்கு விழிப்புடன் எழுந்து இந்த திருக்கோவிலின் தரிசனம் கிடைத்தது இந்தப் பதிவிற்கு கோடான கோடி நன்றிகள் இவ்வளவு சிறப்பு மிக்க கோயில்கள் நம்ம முன்னோர்களோட நமக்கு கிடைத்த பொக்கிஷம் வாக்கு சொல் தலைநகத்தியோடு ஆன்மீகம் உச்சரிப்பு அழகான விளக்கம் வணங்குகிறேன் தங்கள் திருவடி தொழுகின்றேன்
🩵🙏 ஓம் நமசிவாய வாழ்க
அருமையான பதிவு மெய் மறந்து பார்த்த ஒரு ஆலய வழிபாடு அருமையான விளக்கம் அந்த ஐய்யாவுக்கு மிகவும் நன்றி உங்கள் பதிவிற்கு நன்றி ஓம் நமச்சிவாய 🙏
🩵🙏
ஐயா 🙏🙏 உங்கள் திருவடிகளை வணங்குகிறேன். மெய் சிலிர்க்க வைத்தது உங்களுடைய வர்ணனை.
காணக்ககடைக்காத பொக்கிஷம் .காண கண் கோடி வேண்டும்.ஓம் நம சிவாய
மெய்சிலிர்ந்தேன்
பெரியவாளுக்கு நன்றி.
அருமையான பயனுள்ள பதிவு
ஓம் சிவ சிவ ஓம் ,நேரில் சென்று தரிசனம் செய்தது போல இருந்தது உங்களின் பதிவு
திரு பாபு ,அவர்களின் சிவப் பணி வாழ்க.
ரவி மேட்டுப்பாளையம்
நன்றி நன்றி நன்றி ❤️🙏
மிக மிக அருமை ! தகவல்கள் அறிந்த ஐயர்களை பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்ட நிலையில் கோயிலின
மூலை முடுக்கிட்கு எல்லாம் நம்மை அழைத்துச் சென்று அருமையாக விளக்குகிறார்! பக்தியிலும் தகவல்களிலும் மூழ்கித் திளைத்தோம்🙏🙏🙏
ஆவுடையார் கோவிலின் அதிசயங்களை அழகாக கேட்போருக்கு புரியும் படியாக விளக்கம் அளித்த அய்யா அவர்களை மனமார பாராட்டுகிறேன்..நேரில் சந்திக்க ஆசை.. தேவகோட்டை ராமகிருஷ்ணன் ராணிஸ்நாக்ஸ்.......
❤️🙏
அழகிய கோயில். இதை இந்த ப்ராமணர் விவரித்தது மிக அற்புதம். ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
அன்பும் நன்றிகளும் ❤️🙏
ஐயா நல்ல தெளிவான விளக்கம் மனமார்ந்த நன்றிகள்....🙏
நீண்டகாலமாக செல்ல நினைத்தேன் மிக்க நன்றி ஓம் நமசிவாய ஓம்💜✋
இப்படி தங்களின் அற்புதமான
அறிவு நமது முன்னோர்கள்
நமக்கு கொடுத்து விட்டு அதை
பாதுகாக்க கோயில் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள்
அவர்களுக்கு நாம் நம் தலை தாழ்த்தி வணங்கி வேண்டும்
ஓம் நமசிவாய🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
❤️🙏
அற்புதம் ஆவுடையார் கோவில் விந்தை தமிழனுக்கு. பெருமை
மிகச்சிறப்பான தகவல்கள்! முழு கோவில்களில் உள்ள நுணுக்கங்கள் குறித்து விவரமாக யோசிக்காமல் விரைவாக விளக்கியுள்ளார். நன்றி
சிறப்பான பதிவு. அனைவரும் செல்ல வேண்டிய கோவில்.கோவில் சிற்பங்கள் கட்டிடக் கலை பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது . இக்கோவில் தமிழ்நாட்டின் பெருமை.மிகவும் சிறப்பான வீடியோ பதிவு.நல்ல முயற்சி.பாராட்டுகளுடன் நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉
🩵🙏
இவ்வளவு அழகான விளக்கம் கொடுத்து கோவிலின் சிறப்பு . நிழல் விழுந்து.சிற்பவகைகள் எடுத்து சொல்லி எங்களை மெய்சிலிர்க்க வைத்து கண்ணீரும் சுரந்தது ஐயா உங்களை சந்தித்து ஆசி வாங்கவேண்டும்
. மாணிக்கவாசகர் மீண்டும் பிறப் பெடுத்து சிவன் திருவிளையாடல் தன் வாயில் கூறவேண்டும் என்று பிறப்பெடுத்தார்.
இந்த காணொளியை பார்த்து மார்ச் 2 தேதி 2024 சென்றேன் மிகவும் பழமையான கோவில் சிற்பங்கள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
இந்த கோவில் அட்ரஸ் சொல்ல முடியுமா
Aavudayar Kovil pudhukottai sir
ஆவுடையார் கோயிலின் சிறப்பு பெருமைகள் அனைத்தையும் மிக சிறப்பாக காணொளி மூலம் கண்டதிலே மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ஓம் நமசிவாய நான் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன் இவ்வளவு நிதானமாக இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த கோயிலை மீண்டும் ஒரு முறை நேரடியாக சென்று தரிசித்த மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது இதை விளக்கி சொன்ன அந்தப் பெரியவரின் திருவடியை வணங்கி மகிழ்ச்சி கொள்கிறேன் ஓம் நமசிவாய தங்கள் வீடியோவிற்கு மிக்க நன்றி இதுபோல் மேலும் நிறைய ஆலயங்கள் சென்று பதிவினை வெளியிடுங்கள்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.. நிச்சயம் பல ஆலயங்கள் காணொளி பதிவு செய்கிறேன் ❤️🙏
சுவாமி ஜானகிராமன் அவர்களுக்கு நன்றி ,30 நிமிடத்தில் அனைத்து பெருமை,சிறப்பு களை விளக்கியதற்கு நன்றி,நன்றி,வாழ்க, வளர்க.
ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி ❤
ஆவுடையார் கோவில் அற்புதங்கள் ,அதிசயங்களை மிக தெளிவாக விளக்கிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நல்லமுடன் ஜெய் ஶ்ரீ ராம்
அருமையான விளக்கம் நன்றி
❤ நன்றி கோடி கோடி நன்றி❤
ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது கோயிலும் பாட்டும். ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
சிவா திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் ஆவுடையார் அருளை இன்று பெற்றேன் பரிபூரணமாக......
உங்களால் ..
கோடான கோடி நன்றிகள் நண்பர்களே...
சிவா திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
🩵🙏
நமது பெருமையை
உலகம் எங்கும்
பறைசாற்றுவோம்❤❤❤❤❤
ஓம்நாமசிவாயபோற்றி❤❤❤
ஆலயம் குறித்து ஐயாவின் விளக்கம் மிகவும் அருமை..
❤️🙏
அய்யா இவ்வளவு சிறப்பையும் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் சொன்னதற்கு என்னுடைய சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
❤️🙏
நன்றி
ஓம் நம சிவாய 🪷🙏🙏🙏🙏🙏🪷
மிகவும் நன்றி ஐயா🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
அனைத்தும் உண்மை. ஓம் நமசிவாய.சிவாய நமஹ. இறைவா போற்றி போற்றி.
🙏🙏🙏🙏🙏
அற்புதக் கலை பொக்கிஷம். போற்றி பாதுகாக்க அந்த பரமனை அருள வேண்டும்🙏🙏🙏
அருமை ஐயா.மிக்க மகிழ்ச்சி. நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
🙏❤️
யா அருமை ஐயா அருமையான விளக்கம் உங்களை பார்க்கின்ற பொழுது தெய்வ கடாட்சம் நிச்சயமாக திருப்பெருந்துறை சிவனை தரிசிக்க வேண்டும் மாறினின்றி என்னை மயக்கிடும் வஞ்சப்புடன் ஐந்தின் வழிகடைத்தமுதே தேர்தலில் தெளிவே சிவபெருமான திருப்பெருந்துறை சிவனே நீரில்லா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடைய அன்பே
அன்பும் நன்றிகளும் 🙏❤️
@@MichiNetwork வணக்கம் நமஸ்காரம் நான் இலங்கையில் வசிக்கின்றேன் திருப்பெருந்துறை சிவனே தரிசிக்க சென்னையில் இருந்து வழியை கூற முடியுமா
வாழ்க வளமுடன் ஐயா
ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு ரொம்ப நன்றி
உன் குடும்பம் நோய் இன்றி வாழ்க. வாழ்க.....
I can spend whole week in this temple 🙏🏻🌼🙏🏻
அற்புதமான விளக்கம். அரியபெரியபதொண்டை நிகழ்த்திய பெரியவரைவணங்குகிறேன்