460 வது வனம் வாராந்திர கலந்தாய்வுக்கூட்டம் || 20.08.2024 செவ்வாய்கிழமை || sky media

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • 20.08.2024 செவ்வாய்கிழமை, நமது வனாலயத்தில் நடைபெற்ற 460 ஆவது வனம் வாராந்திர கலந்தாய்வுக்கூட்டத்தில், பொள்ளாச்சி, Rithvik Pipe Company திரு.A.ராம்குமார், வடுகபாளையத்தை சார்ந்த திரு.P.A.ஜகூர் அஹமத், திரு.பயாஸ் அஹமத், கரூர் Ever Win Cottons திரு.S.K.மோகன், கரூர் Indigo Textiles திரு.K.வெங்கடேசன், கரூர் இயற்கை விவசாயி திரு.M.N.பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வனப்பிள்ளையார் வழிபாடு மேற்கொண்டும், மூவர் முற்றத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தி, டாக்டர் APJ அப்துல்கலாம் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செய்தும், மூலிகை வனத்தில் அமுக்கிரா கிழங்கு மூலிகை செடி நடவு செய்தும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். திரு.A.ராம்குமார் அவர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செய்தார். வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் உலக நலம் வேண்டி தவம் இயற்றினார். செயல்தலைவர் திரு.K.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும், சிறப்பு விருந்தினர்களும், வனம் இயக்குநர்கள், அறங்காவலர் மற்றும் தன்னார்வலர்கள் பசுமை சார்ந்த கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். வனம் இணைசெயலாளர் திரு.K.M.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இன்றைய அன்னம் பாலிப்பு வழங்கிய வனம் அறங்காவலர் திரு.LIC தங்கவேல் அவர்களை வாழ்த்தி கூட்டம் நிறைவடைந்தது.
    நன்றி
    TMS, வனம் ஊடகத்துறை

Комментарии •