திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 45 I KSS ICF
HTML-код
- Опубликовано: 3 окт 2024
- திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - நாள் 23/09/2024
திருக்கச்சியேகம்பம்
பாடல் எண் : 1
நம்பனை நகர மூன்று மெரியுண வெருவ நோக்கும்
அம்பனை யமுதை யாற்றை யணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் டிங்கட் செஞ்சடைக் கடவு டன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா வெழுகின் றேனே.
பாடல் எண் : 2
ஒருமுழ முள்ள குட்ட மொன்பது துளையு டைத்தாய்
அரைமுழ மதன கல மதனில்வாழ் முதலை யைந்து
பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழு மாடக் கச்சியே கம்ப னீரே.
பாடல் எண் : 3
மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினான் மதில்கண் மூன்றுந் தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூல மேந்தி யேகம்ப மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குந் தலைவர் தாமே.
பாடல் எண் : 4
பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்து
ஏத்துவா ரேத்த நின்ற வேகம்ப மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.
பாடல் எண் : 5
மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபால மேந்திக் கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோ ரேன மோட்டி யேகம்ப மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே.
பாடல் எண் : 6
தருவினை மருவுங் கங்கை தங்கிய சடைய னெங்கள்
அருவினை யகல நல்கு மண்ணலை யமரர் போற்றும்
திருவினைத் திருவே கம்பஞ் செப்பிட வுறைய வல்ல
உருவினை யுருகி யாங்கே யுள்ளத்தா லுகக்கின் றேனே.
பாடல் எண் : 7
கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகி யுலகெலா முய்ய வுண்டான்
எண்டிசை யோரு மேத்த நின்றவே கம்பன் றன்னைக்
கண்டுநா னடிமை செய்வான் கருதியே திரிகின் றேனே.
பாடல் எண் : 8
படமுடை யரவி னோடு பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக் கண்டவ ரஞ்ச வம்ம
இடமுடைக் கச்சி தன்னு ளேகம்ப மேவி னான்றன்
நடமுடை யாடல் காண ஞாலந்தா னுய்ந்த வாறே.
பாடல் எண் : 9
பொன்றிகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ள மெள்ளவே நவில நின்று
குன்றியி லடுத்த மேனிக் குவளையங் கண்ட ரெம்மை
இன்றுயில் போது கண்டா ரினியரே கம்ப னாரே.
பாடல் எண் : 10
துருத்தியார் பழனத் துள்ளார் தொண்டர்கள் பலரு மேத்த
அருத்தியா லன்பு செய்வா ரவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை யிசைய வேறி யேகம்ப மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார் வல்வினை மாயு மன்றே.
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
சிவ சிவ
Ayya, adiyen Madurai G SANKARA NARAYANAN.
Thalai vuchiyai 10 aavathu vaasal yendru
Kollal venduma?
9 vaasalkal yaavai?