சென்னை SBI CAP Securities திரு.K.S.இளமாறன் சிறப்புரை \\ sky media

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • 02.07.2024 செவ்வாய்க்கிழமை, நமது வனாலயத்தில் நடைபெற்ற 453 வது வாராந்திர கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக, திருப்பூர் மாநகர் - முதன்மை போக்குவரத்து காப்பாளர் திரு.P.வெங்கடேஷ், பாரத பசுமை புரட்சி இயக்கம் திரு.சிவசுப்பிரமணியம் - திருமதி.அம்பிகா, திரு.சண்முகம், சென்னை SBI CAP Securities திரு.K.S.இளமாறன், திருப்பூர் திரு.ரவி மற்றும் திரு.முத்து ஆகியோர் இணைந்து மூவர் முற்றத்திலுள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தியடிகள் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் திருவுருவ சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திரு.P.வெங்கடேஷ் அவர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அனைவரும் மூலிகை வனத்தில் மூலிகை செடி நடவு செய்து கூட்டத்தில் கலந்துகொண்டனர். வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் உலக நலம் வேண்டி தவம் இயற்றினார். தலைவர் சுவாதி திரு.K.சின்னசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள், வனம் நிர்வாகிகள், அறங்காவலர்கள், இயக்குநர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு பசுமை சார்ந்த கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். இணைசெயலாளர் திரு.K.M.ஈஸ்வரமூர்த்தி அவர்களை கூட்டத்தை ஒருங்கிணைத்தார். இன்றைய அன்னம் பாலிப்பு வழங்கிய அறங்காவலர், MAYON SATURN FASHIONS திரு.சதீஷ் அவர்களை வாழ்த்தி கூட்டம் நிறைவடைந்தது.
    நன்றி
    TMS, வனம் ஊடகத்துறை

Комментарии •