Karpura Nayagiye || கற்பூர நாயகியே || - Saradha Raaghav
HTML-код
- Опубликовано: 4 авг 2021
- கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
விற்கால வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!
(கற்பூர)
புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!
(கற்பூர)
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!
(கற்பூர)
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளையும் தீருமம்மா!
(கற்பூர)
நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!
(கற்பூர)
அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!
(கற்பூர)
அன்புக்கே நானடிமையாக வேண்டும்!
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!
வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!
(கற்பூர)
கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
செம்பவள வாயழகி உன்னெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!
(கற்பூர)
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை!
(கற்பூர) Видеоклипы
எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் உங்கள் தெய்வ பக்தி பாடல்கள் எல்லாம் கேட்டால் மணம் நிம்மதியாக இருக்கறது
l.r.eswari is best........
தேவி அபிராமி ❤️❤️❤️❤️
ஓம் சக்தி தெய்விக குரலில் தேமதுர பாடல் ஓம் சக்தி
உங்கள் பாடல் கேட்க ரொம்ப சந்தோஷம் மனதுக்கு இதமாக உள்ளது ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருமாரி அம்மாநாயகியே எல்லோரையும் காத்து அருள வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்
தெய்வீக குரல்...You are blessed Mam🙏
உங்கள் பாடல் நன்றாக பிடித்திருக்கிறது. மேலும் இது போண்ற புதிய பக்திப்பாடல்களை தங்கள் இசையம்ப்பில் எதிர்பார்க்கின்றோம் நன்றி.
உங்களுக்கு நிகர் நீங்கதா அம்மா அருமை 💐
வரிகள் அருமை.. பாட்டு மிகவும் அருமை.. உருக வைத்துவிட்டது..
அழகு அருமையான பாடல்.... அருமையாக இருந்தது......
கற்பூர நாயகி- சாரதா ராகவ் வெர்சன் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அற்புதமான குரலில் தேமதுரத்தமிழ் இசையில் பக்திப்பரவசம் ஏற்படும் வகையில் பாடி யதற்கு நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி
அருமையான பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லோரும் சேர்ந்து பாடுவதற்கும் ஆவலைத் தூண்டும் அற்புத பாடல். அருமை.
கருமாரியின் புகழ் பாடுவோம்.
அருள்பெற்றுய்வோம்.
❤
goosebumps aaguthu🔥 super Amman song 🎉🙏❤️👍
ஆடியில் அன்னை பாரசக்தியே மகிழும் வண்ணம் ஒரு கவிதைப்பாட்டு.நீங்கள் நீடுழி வாழ அன்னை அபிராமி அருள்புரிவாளாக.நன்றி
ஓம் சக்தி
🙏🙏🙏
ஓம் சக்தி ஓம் சக்தி
Very nice song and your voice divine mam.
Super sharada mam
என்றுமே இனிமை நல்லாய் இருக்கிறது. நன்றி 🙏 💐 வாழ்துக்கள்
Karpoora naayagi kanakavalli ❤️❤️
Love ❤ you ❤❤❤
கலை பொக்கிஷமே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
🙏
OM sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
"""""" பட்டீஸ்வரம் எனும் துர்க்கை ஸ்தலம்""""" பாடலை பாடி பதிவிடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 🙏🙏🙏
Super bro அன்னையின் புகழை சாரதாவின் குரலில் கேட்டால் பெராஅன்ந்தம்
Dear Saradha Raaghav sisters
Great Milestone and next to Reach the Great Himalayan Milestone you tube subscriber 1 Crores to Reach Definitely very possible sister's.Iknow Everything sister's.
My Heartly Congratulation.
Finally Received silver button from you tube.its really Everywhere Happy today Amazing day .A lot of Hard work and wonderful singings voice is Always success comes . In First time to saw the Only Devotional Artist ... Singer to reach the Great milestone.I'm proud to say that you are a fan.looks like it's going to give Good Hit songs Soon.
Om sakthi thayae Saranam
🙏🙏🙏🙏🙏🙏
Vare vare good song
👌👌👌👌👌👌
So clearly maam have sang beautifully. Can be written and sang in devi temples , 😍🙏🙏🙏😍
Voice super mam 👌
Om shakthi
Nandri Sagittari eeswari ammavukku aduthu ungalukku set aguthu
Very nice voice mam
Amma super whow good singer singing top leval nega
Arputham. 🙏👍
Beautiful 😍
Om sakthi
Mam, there is no way. Voice very clear. Thank you so much🙏
I saw this song in the Notification segment. I was about to sleep.
This is also one of my Favourite song,
So I decided to hear this song and now I am posting my comment.
Very divine singing. Let your journey continue with some more lyrics.
If possible please sing
Karpaga Vallinin Porpathangal pidithen nargathi arulvai amma.
Soo passionate and graceful indeed! I see the Marie Amman within you with divine vibrations
Superb
💖👏💖👏💖👌💖🤴👌👍
Super 🥰😘🥰
Super mam
Nice mam
🙏🏻🌺
Suuper sister
Ta ñku
Sriruthram. , Runhanaaganspathi ,prithingara, kalabairavastagam. Ithu ellam podunga , ore audio potta download cheithu pom daily vettil play pannovom,. Musicalil padathinga download panna mudiyalla unga youtubeil mattum padunga. Appo than nanga kekka mudium download panni. 🙏👍
Very nicely sung
Verkatil veetirukum song pannunga pls
Ethu entha tune kidaiyathu
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
❤️
🙏