1976 வரை இந்தியாவிலேயே இல்லாத மலை... யாரும் அறியா கல்வராயன் மலை ரகசியம்! இது கள்ளச்சாராய மலை அல்ல

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • #kalvarayanhills | #kallakurichi | #history
    1976 வரை இந்தியாவிலேயே இல்லாத மலை
    யாரும் அறியா கல்வராயன் மலை ரகசியம்!
    தமிழ்நாட்டிற்குள்ளேயே தனி ராஜ்யம்
    இது ஒன்றும் கள்ளச்சாராய மலை அல்ல
    கள்ளக்குறிச்சி என்றாலே கல்வராயன் மலையும்.. அங்கே கிடைக்கும் கள்ளச்சாராயமும் தான் இப்போதுள்ளவர்களுக்கு தெரியும். ஆனால் கம்பீரமான இந்த மலையும், அதன் பின்னணியும் பல வரலாற்றை கொண்டது... இதுவரை யாரும் அறிந்திராத பக்கத்தை உங்களுக்கு தருகிறது இந்த தொகுப்பு...
    வெண்பஞ்சு மேகங்கள் தவழ்ந்து செல்ல...வெள்ளி நீரோடை வகிடெடுக்க...பச்சைப்போர்வை போர்த்தி தியானம் செய்யும் இந்தக் கல்வராயன் மலையின் அழகைக்காண கண்கோடி வேண்டும்...
    கால்நடைகளை மேய்ப்பவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் இது கல்வராயன் மலையானதாம்...
    அதேபோல் கல்வராயன் என்பவர் ஆண்டதால் இது இப்பெயர் பெற்றதாகவும் கூறுவதுண்டு...
    இங்கு வாழ்பவர்களை மலையாளிகள் என்று கூறுவதுண்டு...
    இது தமிழ்நாட்டின் "ஏழைகளின் மலைப் பிரதேசம்"... பொதுவாக மலை என்றால் பாறைகளாகவே காட்சி தரும்.. ஆனால் இந்த மலையோ மரங்கள், மூலிகை செடிகள் சூழ கண்களை நிறைக்கிறது...
    பெரும்பாலும் பேசப்படுவதைப் போல கல்வராயன் மலை ஒன்றும் கள்ளச்சாராய மலை அல்ல...
    சின்னத் திருப்பதி எனப்படும் ஏழுமலையான் சன்னதி....கரியகோவில் நீர்த்தேக்கம்...கோமுகி அணை...அழகிய பூங்காக்கள்... மான்கொம்பு நீர்வீழ்ச்சி...மேகம்...பெரியார்... பண்ணியப்பாடி அருவிகள்...படகு குழாம்...என ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்களின் புகலிடம் தான் இந்தக் கல்வராயன் மலை...
    கல்வராயன் மலை நமது எல்லையில் உள்ளது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பெருமை...
    1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம்...ஆனால் ஒன்று தெரியுமா?... 1976 வரை இந்தக் கல்வராயன் மலை இந்தியாவிலேயே கிடையாது... காரணம் என்ன?...
    கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான இந்த கல்வராயன் மலை என்பது வெறும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மட்டும் சொந்தமல்ல...
    சேலம், தருமபுரி,விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களும் இந்தக் கல்வராயன் மலையுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன...
    சரி...இந்தியாவுக்குள் இணைவதற்கு முன் கல்வராயன்மலை தமிழ்நாட்டிற்குள்ளேயே தனித்தீவாக இருந்ததே... அந்தக் கதையைப் பார்க்கலாம்...
    காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட 3 பாளையக்காரர்கள் கல்வராயன்மலை நோக்கி வந்துள்ளனர்...
    விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில்
    சடைய கவுண்டர், குரும்ப கவுண்டர், ஆரிய கவுண்டர் ஆகிய மூவருக்கும் கல்வராயன்மலை தானமாக வழங்கப்படவே... அவர்கள் மலையை மூன்றாகப் பிரித்து ஆட்சி செய்துள்ளனர்...
    இவர்களை ஜாகிர்தார்கள் என்று கூறுகின்றனர்...ஒவ்வொருவருக்கும் தலா 44 கிராமங்கள்...
    சரி...இவர்கள் தங்கள் உணவுத் தேவையை எப்படி பூர்த்தி செய்து கொண்டனர்?...
    சாலை வசதிகளையெல்லாம் மக்களே தான் பார்த்துக் கொள்ள வேண்டும்...மக்கள் தாங்களாகவே பாதை வெட்டுவார்கள்...தடம் போடுவார்களாம்..
    விறகு வெட்ட, நெல் அறுக்கப் பயன்படும் அரிவாள், உள்ளிட்ட விவசாய உபகரணங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது... விளைபொருள்களில் ஒரு பகுதி பாளையக்காரர்களின் வீடு சென்று சேர வேண்டுமாம்...
    ஊரில் நல்லது கெட்டதைப் பார்த்துக் கொள்வது...பஞ்சாயத்து பேசுவது...போன்ற வேலைகளை ஜாகிர்தார்கள் கவனித்துக் கொண்டனராம்..
    இருப்பதை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்துள்ளனர் கல்வராயன் மலைவாழ் மக்கள்...
    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அந்த வம்சாவழியினரை பல்லக்கில் தூக்கிச் செல்லும் வழக்கமெல்லாம் பின்பற்றப்பட்டுள்ளது...
    கிட்டத்தட்ட மன்னராட்சியைப் போலத்தான் இருந்துள்ளது... அதாவது வரலாறு பற்றிய சினிமாவில் நாம் பார்க்கும் காட்சிகள் எல்லாம் கல்வராயன் மலையில் நடந்திருக்கிறது..
    இதெல்லாம் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சி அமல்படுத்தப்படும் வரை மட்டுமே...
    ஜமீன் ஒழிப்பு சட்டத்தின்படி 3 பாளையக்காரர்களின் குடும்பங்களும் தாங்கள் ஆண்டு வந்த பகுதிகளை அரசிடம் கொடுத்து விட்டு சாதாரண மனிதர்களைப் போல் வாழத் துவங்கியுள்ளனர்...
    இந்த ஜாகிர்தாரர்களின் வம்சாவழியினர் இன்றளவும் கல்வராயன் மலைப்பகுதியில் மக்களோடு மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்...
    1976 வாக்கில் தான் இந்தக் கல்வராயன் மலை இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது...
    துவக்க காலங்களில் சுயராஜ்ஜியம்..சுய மரியாதையுடன் அப்பகுதி மக்களின் வாழ்வியல் முறை இருந்துள்ளது...
    கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான அவசியமும் அப்போது இருந்ததில்லை என்கிறார்கள் மன்னராட்சியிலும் இப்போதும் இருப்பவர்கள்...
    1976க்கு முந்தைய கல்வராயன் மலையின் வரலாற்றை பார்த்தோம்.. அதன்பிறகு கல்வராயன்மலை கள்ளச்சாராய மலை என்று கூறும் நிலைக்குச் செல்லக் காரணம் என்ன?... பார்க்கலாம் மற்றொரு தொகுப்பில்...
    Uploaded On 03.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

Комментарии • 71

  • @bendan9442
    @bendan9442 Месяц назад +37

    வீடியோ போட்டு காட்டிட்டல்ல இனி கல்வராயன்மலை கலையிழந்த மலையாக மாறப்போவது உறுதி

  • @kurumba_gounder_kallakuric9249
    @kurumba_gounder_kallakuric9249 28 дней назад +13

    நமது குறும்பர் இனத்தில் வாழ்ந்த முன்னோர்கள் கல்வராயன் மலையில் கட்டியாண்ட அரண்மனையான இடத்திற்குச் சென்றோம். அங்குள்ள அரண்மனையைச் சுற்றி அரண்மனையை ஆராய்ந்து பார்த்ததில் நமது குரும்ப கவுண்டர் அரண்மனை மிகவும் சேதமடைந்து விட்டது. அவற்றையும் வாழ்ந்து வந்த அரசர்கள் இன்றும் அங்கே அந்த ஊரில் வாழ்ந்து வருகின்றனர் குறும்பர் இன ஜாகிதார் மன்னர் மன்னர் இன்றும் அங்கே வாழ்ந்து வருகின்றனர் . அங்குள்ள பல்லாக்கு அழிந்துவிட்டது அவற்றுடன் சேர்ந்து மன்னர்களின் சில பல பொருட்களும் ஆயுதங்களும் அழிந்துவிட்டன..மீத முள்ள ஆயுதங்கள் அவர்கள் சந்தததி இன்றும் அவர்களிடம் பாதுகாத்து வைத்து கொண்டு உள்ளன. அங்குள்ள அரண்மனையை ஆராய்ந்து பார்த்தால் தீர்வு கிடைக்கும். இடம் பழைய பாலப்பட்டி உள்ளது.

    • @TrainingTails-to1mj
      @TrainingTails-to1mj 22 дня назад

      நீங்கள் சொல்லறமாதிரி தெரியல இங்க .. பாமாக காரங்க தான் இருக்காங்க .. இந்த நீயூஸ்ல அவன் ஜாகிர் உசேன் பாய் அனு சொல்றான் .. என்ன என்ன கதையோ சொல்றீனோ இதான் வரலாற மாத்துறதை போல …

  • @mspmediatamilnadu7018
    @mspmediatamilnadu7018 Месяц назад +5

    உண்மை வரலாற்றை கூறிய தந்தி தொலைக்காட்சி க்கு நன்றி

  • @msm7357
    @msm7357 Месяц назад +10

    கல்வராயன் மலையில் தற்போது குறும்பர் இன மக்கள் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. குறும்பர் இன மக்களின் கலாச்சாரம் தனித்தன்மை வாய்ந்தது. அன்று முதல் இன்று வரை கலாச்சாரத்தை கடைபிடிக்கும் ஒரே இனம் குறும்பர் இனம். தலையில் தேங்காய் உடைத்து தெய்வத்தை வழிபட கூடியவர்கள்.

    • @kurumba_gounder_kallakuric9249
      @kurumba_gounder_kallakuric9249 28 дней назад

      குறும்பர் இன மக்கள் இருப்பதற்கு ஆதாரம் உள்ளது குறும்பக்கவுண்டர் ஜாகிதார் தலைமுறை இன்றும் இருந்து கொண்டு தான் உள்ளார்கள் மேலும் தெரிந்து கொள்ள @KURUMBA_GOUNDER_KALLAKURICHI என்கிற இன்ஸ்டாகிராம் ஐடிக்கு மெசேஜ் செய்யவும்

  • @gopalgopal8185
    @gopalgopal8185 22 дня назад +2

    எப்படியும் கட்டுமரம் தான் சாராய ஆசையை தூண்டி இருப்பார்

  • @msm7357
    @msm7357 Месяц назад +16

    குறும்பர் கவுண்டர் ஒரு ஜாகர்தாரர் ஆக இருந்தார். ஆனால் இன்று இருக்கிற இடம் தெரியவில்லை.

    • @kurumba_gounder_kallakuric9249
      @kurumba_gounder_kallakuric9249 28 дней назад

      யாரு சொன்னது நண்பா அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்று. நமது அரசாங்கம் முறையான தேடல் இல்லாமல் விட்டுவிட்டார்கள் இன்றும் அவர்கள் சந்ததி வாழ்ந்து வருகின்றன . அவர்கள் ஆட்சி செய்த கோட்டைகள் சிதைந்து கிடக்கின்றது அவர்களை நாங்கள் சென்று பார்த்தோம் அனைத்தும் எங்களிடம் ஆதாரம் உள்ளது . உங்களுக்கு குரும்பகவுண்டர் ஜாகிதார் பற்றி தெரிய வேண்டும் என்றால் @kurumba_gounder_kallakurichi என்கிற இன்ஸ்டாகிராம் ஐடிக்கு எனக்கு மெசேஜ் செய்யவும்

  • @svspsemmanpatti
    @svspsemmanpatti Месяц назад +3

    Finally, indha place famous aagudhu... I studied here... Serappattu. Good places to explore.

  • @user-by2wd7xk3g
    @user-by2wd7xk3g 27 дней назад +4

    🔥🔥🔥 வன்னியர் வரலாறு கூறுகிறது ❤

  • @arumugam8911
    @arumugam8911 Месяц назад +3

    அருமையான விளக்கம் மகிழ்ச்சி

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 29 дней назад +1

    Arumai 💚🌳👏

  • @krishnaraj463
    @krishnaraj463 Месяц назад +10

    திரு.முத்துசாமி கவுண்டர் சுமார் 2 - 3 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார் இவர் எங்கள் குடும்ப நண்பர் இவரது மகன் ஒரு மருத்துவமனையில் மாத சம்பளம் பெற்று வாழ்ந்து வருகிறார் - இவர்கள் ஜாகிர்தார் குடும்பத்தினர்

    • @siva1908
      @siva1908 Месяц назад +4

      Are they a community called Vanniyar??

    • @krishnaraj463
      @krishnaraj463 Месяц назад +1

      @@siva1908 yes

    • @meenukutti2624
      @meenukutti2624 Месяц назад +1

      Karala vamsam...

    • @sivasakthi5264
      @sivasakthi5264 Месяц назад

      ​@@meenukutti2624 கள்ளக்குறிச்சி பக்கம் வந்து இப்படி சொல்லீட்டு இருக்காதீங்க ... இது படையை ஆட்சி செய்த படைஆட்சி கவுண்டர் மண்.. அதிகப்படியான பொய் வரலாற்றை பேசுவதே வெள்ளாளர்கள் வேலை.. கவுண்டர் பட்டத்தினை முழுவதும் ஆட்டைய போடும் என்னம் ஒருபோதும் நிறைவேறாது

    • @Balamurugan-hn8sp
      @Balamurugan-hn8sp Месяц назад +1

      ​@@siva1908வன்னியர் இல்லைங்க.
      மலையாளிக்கவுண்டர்.

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 29 дней назад +5

    கள்ளக்குறிச்சி கவுண்டர் மடையர்கள் வரலாறு மறந்துவிட்டு திரியுறாணுக விழிக்குமா தமிழினம்

  • @Harini-dl3or
    @Harini-dl3or Месяц назад

    Waiting for next week part

  • @surya__26
    @surya__26 Месяц назад

    Ivalo history irukunu ipo than engaluku therium❤❤❤ sema place❤❤

  • @ganesank5802
    @ganesank5802 23 дня назад +1

    இங்கே பிரதான தொழில் சாராயம் காய்ச்சுவது தான்.
    இந்த மக்கள் இப்படி இருப்பதற்கு காரணம் இங்கேயுள்ள திமுக ஆட்கள் தான் குறிப்பாக உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் MLAக்கள் தான்.
    சாராயம் காய்ச்சுபவர்களுக்கு உறுதுணையாக உதயசூரியன் MLA மற்றும் விற்பவர்களுக்கு ஆதரவாக வசந்தம் கார்த்திகேயன் MLA உதவுவார்கள். இவர்களை மீறி சாராய வியாபாரிகளை கைது செய்ய முடியாது.

  • @ramsubash2605
    @ramsubash2605 Месяц назад +2

    பாளையக்காரர் களை பற்றி அறிய விரும்பினால் இனாம் சுரோத்திரயம் திருக்கணங்கூர் இல் உள்ளனர் எங்கள் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது. எங்கள் வம்சம் கச்சிராயர் அதன் சாட்சி கச்சிராயபாளையம் இந்திரா காந்தி வழங்கிய Title Deed நகல் எங்களிடம் உள்ளது. நன்றி

    • @user-wn5ov2ue1x
      @user-wn5ov2ue1x 28 дней назад +2

      அப்படியா நண்பரே மகிழ்ச்சி நீங்கள் எங்கு உள்ளீர்கள்.. உங்களை பற்றிய தகவல் தெரிய விரும்புகிறேன்...

  • @thenimozhithenu
    @thenimozhithenu Месяц назад +3

    My place

  • @user-wn5ov2ue1x
    @user-wn5ov2ue1x 28 дней назад +3

    ஜாஹிர் உசைன் எப்படி டா பாளையக்காரர் ஆனாங்க🤣 ஜாஹிர்தார்கள் என்றால் ஜமீந்தார்கள் என்று அர்த்தம்

  • @vsenthilkumar2314
    @vsenthilkumar2314 16 дней назад +1

    கல்வராயன்,சேர்வராயன்,கச்சிராயன்,காடவராயன்,சம்புவராயன்.

  • @sangeethasangi5816
    @sangeethasangi5816 Месяц назад

    My village

  • @peter-uo6lh
    @peter-uo6lh Месяц назад +1

    நானும் கள்ளக்குறிச்சி தான் ❤

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 22 дня назад

    முற்றிலும் ஒரு தவறான ஒரு தொகுப்பு இந்த கல்வராயன் மலை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் 1976-ல் தான் இந்தியாவுடன் இணைந்தது என்று சொல்வது முற்றிலும் தவறு

  • @amolikaproducts6819
    @amolikaproducts6819 26 дней назад

    Hope govt won't give this hill for quarry

  • @Rajadurai369
    @Rajadurai369 Месяц назад

    Naan kallakuritsithaan

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 20 дней назад

    ஆமாம் ஆமாம் ஆமாம்
    கண் version சால் ரா

  • @user-yg5vc7ci4r
    @user-yg5vc7ci4r 28 дней назад +2

    இது ஒன்றும் கள்ளச்சாராய மலை அல்ல😂🤣

  • @thendrelstudio4698
    @thendrelstudio4698 8 дней назад

    MLA karanam

  • @DineshKumar-zw1wj
    @DineshKumar-zw1wj 28 дней назад

    Dai edayachum vitu vidunga kal guavari potu nasam pniduvnga inda atchila😊

  • @ramji102
    @ramji102 Месяц назад +2

    Ho No, Dear God pls save the land & sand from Mafia becouse this is Dravidiam model

    • @ganesank5802
      @ganesank5802 23 дня назад

      There is nothing leftover to save. It is already stolen by so called dravidiam😂😂😂 and now it is occupied with Christian missionaries

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e 26 дней назад

    கள்ளச்சாராயம் case எப்படி மாற்றுவது 60கொலைஎன்னமா
    சூப்பர் plate திருப்புறா

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w 29 дней назад

    Dravedan looting kumble create illegal wine preparation

  • @vijaypandiyan8757
    @vijaypandiyan8757 24 дня назад

    கள்ளச்சாராயம் மலை திராவிட மாடல்

  • @kumarkanthasamy7501
    @kumarkanthasamy7501 27 дней назад

    இதை ஏன்.இத்தனைஆண்டுகளா.எங்கேபோனிர்கள்.

  • @ManiKandan-ub1we
    @ManiKandan-ub1we Месяц назад +3

    Verenna ...dravida model aatchi daaan

  • @udhayasti8951
    @udhayasti8951 Месяц назад

    கள்ளசாரயம் மலை

  • @kandasamypalanippan1604
    @kandasamypalanippan1604 Месяц назад +1

    தந்தி TV இதை நல்ல திறைகதையாகவே TV சீரியல் ஆகவே எடுக்களாம்

  • @SarathbabuSubbarayan
    @SarathbabuSubbarayan Месяц назад +4

    1976 kku appparam DMK vanthathu than karanam

  • @Sheik41
    @Sheik41 Месяц назад +2

    Dmk than..

  • @udhayasti8951
    @udhayasti8951 Месяц назад

    நானூம் கள்ளகுறிச்சி தான்

  • @manivannansankar2193
    @manivannansankar2193 Месяц назад

    Ippadi aniyayam panna congress enna pananum Makkalukku

  • @drppraveenkumarperinbam5348
    @drppraveenkumarperinbam5348 Месяц назад

    Adhe soonathe neenga than.

  • @sjramesh1330
    @sjramesh1330 29 дней назад +1

    நானும் கள்ளக்குறிச்சி தான்

  • @thenimozhithenu
    @thenimozhithenu Месяц назад +2

    உருட்டு😂😂😂😂😂