திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் | எமன் மற்றும் சனிபகவான் பிறந்த தலம் | எமபயம் நீக்கும் தலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில், திருமீயச்சூர்
    திருத்தலக் குறிப்பு:
    இத்திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் இக்கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த கலை நயம் மிக்க சிற்பங்களைக் கொண்ட சிவ தலமாக விளங்குகிறது. இந்த இரண்டு கோயில்களும் சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன. இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் கோயில் திருப்பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. சோழ நாட்டின் காவிரி தென்கரை பாடல் பெற்ற திருத்தலங்களில் 56, 57-வது திருத்தலங்களாக விளங்குகின்றன.
    தல மூர்த்தி : அருள்மிகு மேகநாத சுவாமி
    தல இறைவி : அருள்மிகு லலிதாம்பிகை (சாந்த நாயகி அம்மன்)
    தல விருட்சம் : வில்வ மரம்
    தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி
    திருமீயச்சூர் பெருங்கோயில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பினை உடையது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும், கோயிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடனும் காணப் படுகின்றன.
    இத்திருக்கோயில் அன்னை லலிதாம்பிகை இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாத வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இப்பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் உயர்வு தாழ்வின்றி வாழ வேண்டும் என்பதை இக்கோயிலில் காணும் சிற்பங்களில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
    திருத்தல வரலாறு:
    காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை என்ற இருவரும் சிவபெருமானை மனதில் நினைத்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி இருவருக்கும் ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்தார். இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் ஒரு மகன் பிறப்பான் எனக் கூறி விட்டு மறைந்தார். ஆனால் ஒரு வருடம் கழித்து விநநையின் அண்டத்தில் இருந்து ஒரு பறவை பிறந்து அது பறந்து சென்று விட்டது. தனக்கு மகன் பிறக்காமல், இப்படி ஆகிவிட்டதே என்று ஈஸ்வரனிடம் வருந்தி கேட்கிறாள். அதற்கு முக்கண்ணன் ''நான் கூறியது போலவே அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாக கருடன் என்ற பெயருடன் உலகமெங்கிலும் போற்றிப் புகழப் படுவான்'' எண்டு கூறினார்.
    இதனிடையே விநநைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்று அவசரப்பட்டு தனக்குக் கொடுக்கப் பட்ட முட்டையை பிரித்துப் பார்த்தாள் கர்த்துரு. இவளது அவசரத்தினால் அந்த முட்டையில் இருந்து சரியானபடி வளர்ச்சி அடையாத தலை, முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த குழந்தை பிறந்தது. தான் செய்த தவறை உணர்ந்த கர்த்துரு இறைவனை நாடி, இப்படி ஆகி விட்டதே என மனம் வருந்தினாள். சிவபிரானும், ''நான் சொல்லியதுபோல் இக்குழந்தை சூரியனுக்கு சாரதியாக விளங்கி உலகப் புகழ் பெறுவான்'' என்று கூறினார்.
    இந்நிலையில் கர்த்துரு தனது மகனுக்கு அருணன் எனப் பெயர் சூட்டினாள். இறைவனின் ஆணைப் படி சூரியனுக்கு சாரதியாக விளங்கினான். அருணன் சிவனின் இருப்பிடமான கைலாசம் சென்று அவரை தரிசித்து வர சூரியனிடம் அனுமதி கேட்டான். சூரியன் அருணனை பரிகசித்து, பெருமானை பார்க்கச் செல்ல உன்னால் முடியாது என்றும் கூறினான். நம்பிக்கை இழக்காத அருணன் இறைவனை நினைத்து தவமியற்றினான். சூரியன், இப்போதும் அருணனுக்கு பலவிதங்களில் தொல்லைகளைக் கொடுத்தாலும், தன் மனம் தளராத அருணன் மேலும் தீவிரமாக தவமிருந்தான்.
    இதனைக் கண்ணுற்ற கைலாசநாதன், அருணனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். சூரியனிடம், ''என்னைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் தவமிருந்த அருணனுக்கு நீ கொடுத்த கஷ்டங்கள் என்னை வருத்தமடையச் செய்தது. இதன் காரணமாக உன் மேனி கார் மேக வண்ணமாய் மாறட்டும்'' என்று சாபமிட்டார். இதன் காரணமாக இப்பூவுலகமே இருளில் மூழ்கியது.
    இதனைக் கண்ட பரமேஸ்வரி தாய் சிவனிடம், சூரியன் கரு நிறமாய் ஆனதினால் உலகமே இருண்டுவிட்டது. சூரியன் இன்றி உலகம் இயங்காதே என வினவினார். கவலை கொள்ள வேண்டாம் தேவி. அருணனின் தவ பலத்தினால் உலகம் வெளிச்சம் பெரும் என பெருமான் கூறினார். தனது தவறினை உணர்ந்த கதிரவன் இறைவனிடம் மன்னித்தருள வேண்டினார். ஈசன் சூரியனிடம் "எம்மை நீ ஏழு மாத காலம் வணங்கினால் உனது சாபம் நீங்கும்'' என்றார்.
    அதன்படியே சூரியன் இத்திருக்கோயில் வந்து ஏழு மாத காலம் தவமிருந்து பூஜை செய்து வழிபட்ட பின்னரும் தனது கருமை வண்ணம் குறையவில்லையே என்று மனம் வருந்தி தன்னைக் காப்பாற்றும்படி கதறுகிறார். இவர் செய்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து கோபம் கொண்ட பார்வதி தாயார், தானும் சாபமிட முற்படுகிறார். அவரி தடுத்தாட்கொண்ட இறைவன், இவ்வுலகம் பிரகாசம் பெறவும், நீ சாந்தமடையவும் தவமிருப்பாயாக என்று கூறிவிட்டு, சூரிய பகவானுக்கு சாப விமோசனம் அளித்தார்.
    திருக்கோயில் சிறப்பு:
    அமர்ந்த திருக்கோலத்தில் பேரழகுடன் காட்சி தருகிறார் இத்தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை. நின்ற இடத்தில் அப்படியே சிலையாக நின்று விடுவோம் அன்னை லலிதாம்பிகையின் திருமுகத்தைக் காணும்போது. அன்னையைக் கண்ட ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். அன்னை லலிதாம்பிகை பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி என எல்லோரும் இணைந்த வடிவமாகத் திகழ்பவள்.
    இத்திருத்தலத்தில் காணப்படும் அன்னையின் திருவுருவத்தை, வடிவத்தை உலகில் வேறு எங்கும் காணமுடியாது என்பது இத்தலத்தின் பெருஞ்சிறப்பு.
    அமைவிடம்:
    திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள பேரளத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் திருமியச்சூர் உள்ளது.
    கோயில் Google map link
    maps.app.goo.g...
    if you want to support us via UPI id
    k.navaneethan83@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    தமிழ்

Комментарии • 25

  • @rameshramesh-ou3vi
    @rameshramesh-ou3vi Год назад +4

    மகிழ்ச்சி இதுபோன்று தேவாரப்பதிகம் பாடப்பெற்ற மொத்தமுள்ள அனைத்து சிவ ஆலயங்கள் அவை அமைந்துள்ள இடம் இவை பற்றி ஒரு தொடர்ச்சியான பதிவிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p 5 дней назад

    Om sakthi Om namah shivaya om lalitha அம்பிகை போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ❤❤❤❤

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +3

    ஓம் லலிதாம்பிகை உடனுறை சூரியனார் திருவடிகள் போற்றி ஓம்

  • @vijisai9210
    @vijisai9210 4 месяца назад

    Nandri Nandri Ayyya 🙏🙏 Ungal karuneiyal nala nala koil paathu vanangurom. 👌👌🙏🙏🙏🙏🙏

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 2 месяца назад +1

    Om namasivaya

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Год назад

    Nalla pathivu ayya
    Arumayana isthalam parkka vendiya kovil.

  • @RaviRavi-ql2hf
    @RaviRavi-ql2hf 4 месяца назад

    ஓம் சக்தி சர்வ சக்தி

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சார் 🙏

  • @rameshramesh-ou3vi
    @rameshramesh-ou3vi Год назад +1

    108 திவ்ய தேசங்கள் அவை அமைந்துள்ள இடங்கள் பற்றி பதிவுகள் போடவும்

  • @rajagopalannagarajan7475
    @rajagopalannagarajan7475 6 месяцев назад +1

    Thanks

    • @mathina
      @mathina  6 месяцев назад

      Welcome

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 Год назад +1

    🙏🙏🙏

  • @gnanampavanasam1558
    @gnanampavanasam1558 Год назад +1

    thanku

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 Год назад

    Super sir

  • @kirohiro7333
    @kirohiro7333 4 месяца назад

    Om shakti lalitambikaiyayei potri

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад

    🙏🌷🔥சிவாய நம🔥🍋🌷🙏🔥

  • @vijaya_kumar-yt
    @vijaya_kumar-yt Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @tharumambalranjani5179
    @tharumambalranjani5179 11 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramkumarm884
    @ramkumarm884 Год назад

    SRI LALITHAMBIGAI SAMEDA SRI MEGHANATHA SWAMIYAE SARANAM

  • @AGASTHIYARARASAN
    @AGASTHIYARARASAN Год назад

    Iya.migavum.santhosam.itha.pathivukku.si.va.si.va

  • @viswanathanviswa3132
    @viswanathanviswa3132 Год назад +1

    Temple.engka.vuladhu
    Om.namasiveiya

  • @viswanathanviswa3132
    @viswanathanviswa3132 Год назад

    Channai.erandu.eppdey.sela.vandum

    • @mathina
      @mathina  Год назад

      பேரளம் அருகே அமைந்துள்ளது

  • @sundarthangaiah4851
    @sundarthangaiah4851 Год назад

    Thirukodiallur just 1km

    • @selvis972
      @selvis972 Год назад

      சிவாய நம