கடவுள் கற்றுத்தருகிறார் | Rev. Fr. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | The Homily | Sermon

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு
    முதல் வாசகம்
    அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.
    அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8
    அந்நாள்களில்
    எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.” பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார்.
    அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக்கொண்டார்.
    ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.
    ஆண்டவரின் அருள்வாக்கு.
    பதிலுரைப் பாடல்
    திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8
    பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
    ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
    நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி
    என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
    துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி
    அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
    இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி
    ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
    ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி
    இரண்டாம் வாசகம்
    கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
    திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 30- 5: 2
    சகோதரர் சகோதரிகளே,
    கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.
    மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.
    ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
    ஆண்டவரின் அருள்வாக்கு.
    நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
    யோவா 6: 51
    அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
    நற்செய்தி வாசகம்
    விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.
    ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51
    அக்காலத்தில்
    “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படிச் சொல்லலாம்?” என்று பேசிக் கொண்டார்கள்.
    இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.
    வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே.
    விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”
    ஆண்டவரின் அருள்வாக்கு.
    #மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons

Комментарии • 25

  • @selvambikaisenathirajah3611
    @selvambikaisenathirajah3611 16 дней назад +1

    Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen

  • @nishaj6653
    @nishaj6653 24 дня назад +1

    Thank you Father ❤❤

  • @abrahammurugesan4200
    @abrahammurugesan4200 14 дней назад +1

    Thank you father this message is very important and useful for all
    Praise the lord. Hallelujah 🙌

  • @francism.mathalaimuthu7217
    @francism.mathalaimuthu7217 11 дней назад +1

    " PRAISE THE LORD " 🎉
    Good " GOD " WORDS
    Thankyou FATHER

  • @AmulRani-x6c
    @AmulRani-x6c 3 дня назад +1

    Father your teaching and preaching I like it your example super warning also your sermon is deep and understanding thank you Amen🙏

  • @Fransina-cv9mc
    @Fransina-cv9mc 27 дней назад

    God message father 🙏 thanks lord thank you father 🙏👌👌👏👏

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df 21 день назад +2

    அருமை யான மறையுரை ஃபாதர் 🙏 வாழ்த்துக்கள் பல 👍

  • @barbarasuresh919
    @barbarasuresh919 29 дней назад +1

    Praise the Lord 🙏 Hallelujah

  • @VijithkumarVijithkumar-v9i
    @VijithkumarVijithkumar-v9i 23 дня назад +1

    ஆமென்

  • @arulmary6587
    @arulmary6587 28 дней назад +1

    Aama father neenge sonnathu correct fhter 🙏🙏🙏 thank you God bless ✝️

  • @sunirani3290
    @sunirani3290 17 дней назад

    Fr. You message shows that spirit of the Lord leads and guides you. Praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @peterpandiyan486
    @peterpandiyan486 12 дней назад

    Praise the Lord fr your message super fr thanks fr AVE MARIA pray for us jesus o jesus i give work thanks you Jesus and mathave

  • @ambrosearun7011
    @ambrosearun7011 Месяц назад

    Thank You Father 🙏

  • @bernardannie9293
    @bernardannie9293 27 дней назад

    Awesome My Dear Beloved Father 👌👌👌👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻

  • @saralasandha8127
    @saralasandha8127 18 дней назад

    Thank you ayya

  • @surendarsaci2554
    @surendarsaci2554 28 дней назад +2

    நன்றி இயேசுவே அல்லேலூயா

  • @georgebuldon
    @georgebuldon 27 дней назад

    ஆமென் தேங்க்யூ பாதர்

  • @lespanlespan1958
    @lespanlespan1958 Месяц назад

    Amen❤❤❤

  • @lourdusamy3755
    @lourdusamy3755 29 дней назад

    🙏🔥🙏

  • @AmalAmsa
    @AmalAmsa Месяц назад

    ❤:❤❤❤❤ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க❤❤❤❤❤

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb Месяц назад

    Thankyou father praise the Lord

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 Месяц назад

    Nice message father.
    Thanks Lord.🙏🙏🙏

  • @selvaraj2253
    @selvaraj2253 Месяц назад

    நன்றி இயேசுவே

  • @ragupathip5412
    @ragupathip5412 Месяц назад

    ஆமென் ஆல்லேலூயா

  • @victoriamary6814
    @victoriamary6814 Месяц назад

    Amen🙏🙌🙌❤️❤️❤️