ஆனைமலை ஸ்ரீசத்யேந்திர சித்தர் பீடம் நிறுவனர் திரு.மூலிகை சித்தர் அவர்கள் சிறப்புரை |76 ஆம் வான்மழை

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • 26.07.2024 வெள்ளிக்கிழமையன்று, நமது வனாலயத்தில் நடைபெற்ற 76 ஆம் வான்மழை கருத்தரங்கம், திருப்பூர் அழகு வள்ளி கும்மி குழுவின் கும்மியாட்டத்துடன் துவங்கியது. வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் தவம் இயற்றினார், வனம் விரிவாக்கத்துறை இயக்குநர், CIBI திரு.ஆனந்த் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கோவை KG குழுமத்தின் தலைவர் திரு.K.G.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். ஆனைமலை ஸ்ரீசத்யேந்திர சித்தர் பீடம் நிறுவனர் திரு.மூலிகை சித்தர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இயற்கை முறை நோயில்லா வாழ்க்கை முறை குறித்து சிறப்புரையாற்றினார். மரப்பயிர் ஆலோசகர், திரு.R.P.கணேசன் அவர்கள் செயற்பாட்டாளராக கலந்துகொண்டு மரப்பயிர் வளர்ப்பு முறை குறித்து சிறப்புரையாற்றினார். இயற்கை விவசாயிகள், மல்லேகவுண்டன்பாளையம் செல்வி.ர. மேனகா மற்றும் சாமளாபுரம் திரு.S.S.மோகன்ராஜ் அவர்களுக்கு வனம் அமைப்பின் ‘நம்மாழ்வார் விருது’ வழங்கி, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் & சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் பரிசு கூப்பன் மற்றும் மீன் அமிலம் இயற்கை உரம் பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, வனம் தலைவர், சுவாதி திரு.K.சின்னசாமி அவர்கள் தலைமையில், பல்லடம் ராம் நெய் நிறுவனம் மற்றும் தங்கலட்சுமி ஜுவல்லரி சார்பில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன. இணைசெயலாளர் திரு.K.M.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
    நன்றி

Комментарии •