தன் திருவடியை அடியார்களுக்காகப் பிறப்பித்தவர் | Sri. U. Ve. Velukkudi Krishnan | Namangal Aayiram
HTML-код
- Опубликовано: 7 окт 2024
- Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
#kumudambakthi #namangalaayiram #velukkudikrishnan #uvevelukkudikrishnan #VelukkudiUpanyasam #VelukkudiDiscourses #velukkudikrishnanupanyasam #lordperumal #vainavam
Don't Miss ⤵️
______________________________
Velukkudi Upanyasam : • பெருமாள் அன்னமாக இருக்...
______________________________
Welcome to Kumudam Bakthi, your spiritual haven. Immerse yourself in the world of devotion, explore ancient scriptures, and experience divine bliss. Join us on this sacred journey of enlightenment and connect with your inner self. Subscribe now for divine inspiration! 👉 / @kumudambakthi
Follow us
________________________________________
Facebook - / kumudambakthi
Instagram - / kumudambakthiofficial
Twitter - / kumudambakthi
Website - www.kumudam.com
________________________________________
Other Channels
_________________________________________________
Kumudam 👉 / @kumudamdigital
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
Contact: digital@kumudam.com
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
CONGRATULATIONS.
U AMBIKAPATHY.
குருவே துணை குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇💐💐💐💐💐💐
ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏 தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏🙏
Very good niece sir 🍎🍎🍎🍎🍎
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🌹🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏💐💐💐
பகுதி -2
கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் விஷ்ணுவின் திருநாம விளக்கத்தை
அத்புதமாய் வேளுக் குடி ஸ்ரீகிருஷணன்
ஸ்வாமிகள் விவரித்ததிலிருந்து சில -
ஸங்க்ரஹ - எப்போது வாமண மூர்த்தியாக இருக்கிறாரோ சுருக்கமானவர். அளப்பதற்கு அரியவராய் இருந்தால் நம்மால் அறிந்து கொள்ள இயலாது. அளப்பதற்கு உரியவராக இருந்தால் தெரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே ஸ்வாமிகள் சாதித்த சரித்திரத்தின் படி அனந்த பத்மநாப ஸ்வாமி திவாகர முனிவருக்கு எப்படி சேவை சாதித்தார். பெரிய இலுப்ப மரம் வீழ்ந்து ஊர் முழுக்க 15 மைல் தூரத்திற்கு பெரிய திருமேனியாக பிறக்க பின்திவாகர முனிவரின் வேண்டுகோளுக்கிணங்கி தன்னை முனிவரின் தண்டத்து அளவிற்கு தன்னை சுருக்கிக் கொண்டார். 3 வாசலாக சேவிக்கிறோம். அவ்வளவு பெரியவர் சுருங்கி இருப்பதை இங்கு பார்த்தோம். ஆக மொத்தம் இவருக்கு தன்னை பெருக்குவதோ, சுருக்குவதோ முக்கியமல்ல. பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பதே முக்கியம் என்பது தெளிவாகிறது. அதைத்தான் ஸங்கரஹ : என்கிறார்கள். பக்தர்கள் எளிதில் பெருமானை பற்றுப்படி இருக்கிறார். ஆழ்வாரேதன் முதல் பத்து நம் திருவாய் மொழியில் பத்துடை அடியவர்க்கு எளியவர்.. எத்திறம் என்ற பாசுரப்படி பக்தியோடு பெருமளை நெருங்கினால் அவருக்கு எளியவராய் இருப்பாராம். பக்தியற்றவருக்கு அரியவராக இருப்பார். பத்துடை எளியவர் என்றால் பெருமான் பக்தியை ஆழ்வார் அளவிற்கோ திருமங்கை ஆழ்வார் அளவிற்கோ எதிர்பார்க்கவில்லை. அது நம்மால் முடியவும் முடியாது. பெருமான் என்றால் த்வேஷிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு போகாமல் இருந்தாலே போதும் நாளடைவில் ஒவ்வொரு நிலையாக கடந்து, காலணி கழட்டி கைய கூப்பும் அளவிற்கு வந்து பின் படிப்படியாய் கோயிலுக்கு உள்ளே வரலாம் என தீர்மானித்து பின் பத்ம
நாபளை பற்றி அறிந்து கொண்டு நித்யம் வர ஆரம்பிப்பான். பெருமான் எங்கனம் தன்னை மாற்றிக்கொண்டாரெனில் எளியவர்க்கு வெகு சுலபமாய் சேவை சாதிப் பார் ஆழ்வார், ராமானுஜர் போன்று பக்தியில் சிறப்புற்று இருப்பவர்களுக்கு அவர்களை நன்கு அழவைத்து சிரமம் கொடுப்பார் . அவர்கள் எப்படியும் பெருமாளை விட்டு அகலமாட்டார் என தெரியும். ஆனால் வாசலில் இருக்கும் பக்தன் தான்
மதில் மேல் பூனை என அறிந்து நன்கு அனுக்ரஹம் பண்ணுவார். பக்தியில் நன்கு ஊறியவர்களுக்கு பொறாமையாய் நாம் இவ்வளவு பக்தி செய்தும் பெருமான் மெத்தனமாக இருக்கிறார் போல் தோன்றும். ஆக பக்தர்களை எளிதில் கிரகித்தார்.
161 - ஸர்க: ஸர்க்கம் என்றால் படைப்பு சிருஷ்டி என பொருள்ப டும் .தன்னையே படைத்துக் கொண்டு தன் திருவடிகளை படைத்து பக்தர்களுக்காக கொடுத்தார். இதைத்தான் படைப்பு என்கிறார்கள். திரிவிக்ரமானாய் பெருமான் உலகத்தை தாவி அளந்த போது எல்லார் தலையிலும் தன் காலை வைக்க ஆசைபட்டாராம். இவனை குனி என்றால் குனிய மாட்டான் என்பதற்காக தான் வளர போவதாக அறிவித்ததும் அனைவரும் குனிய அப்போது அனைத்து தலைகளிலும் தன் திருவடியை பதித்தார் என்பதை லெளகீக திருஷ்டாந்தத்துடன் அருமையாய் கூறி இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.
At what time it is telecasted in bhakthi channel? When?
பகுதி - 1
இப்பகுதியில் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ
கிருஷ்ணன் ஸ்வாமிகள் விஷ்ணு வின் 159 முதல் 162 வரையிலான திருநாமங்களுக்கு விபுலமான அர்த்தங்களை அர்த்தித்ததிலிருந்து சில.
159 - அதீந்தர : உபேந்தர: வாமண: இவ்
வரிசையில் அதீந்த்ர: பிறப்பாலே இந்திரனுக்கு தம்பியாக இருந்தாலும் அவர் செயல்பாடுகளில் இந்திரனை மிஞ்சி - தாண்டி இருந்தார். இந்திரன் போன்ற குணம் இவருக்கு கிடையாது. இந்திரன் நேற்று நல்லது செய்தால் இன்று அவருக்கு தப்பாகவே செய்கிறான். அது போல் இல்லாமல் எப்போதும் அதீந்த்ர: இந்திர .... எனது துவங்கும் ப்ரமாணப்படி தனக்கு இருக்கும் ஐஸ்வர்யத்தாலும் தான் புரிந்த சேஷ்டிதத்தாலும் அந்த இந்திரனை வெகுதூரத்திற்கு தாண்டி நிற்கிறார். இந்திரனுக்கு இருக்கும் சேஷ்டிதம் எங்கெங்கோ யார் யாரிடத்திலோ சாபம் வாங்கியது தான் இவர் பண்ணியது. சொத்து ஏதாவது இருக்கான்றால் சின்ன சொதது மூவுலக சொத்து. ப்ரஹ்மாவிற்கு பகல் முடிந்து போய் விட்டால் இவனுக்கு நாளே முடிந்தது என அர்த்தம். இந்திரனின் பதவி 1000 சதுர்யுகம். ஒரு சதுர் யுகம் 43, 20000 வருஷம். இதை ஆயிரத்தால் பெருக்கினால் அத்தனை வருஷம் இந்திரனின் பதவி காலம். அந்த பதவி காலம் கல்பத்திலும் கல்பம் என்கிறார்கள் எல்லாவற்றையும் விட வைகுண்டத்தில் காலவித்யாசம் கிடையாது. ஆக இந்திரனே சின்ன சக்தி படைத்தவர். அந்த சக்தி படைத்தவரை பெருமாள் தாண்டியது வியப்பே இல்லை. இந்திரன் அண்டி பிழைத்தவர். பெருமானுக்கு உபகாரம் செய்யாமல அபகாரம் செய்தான். என் பெருமானின் .. ஆழ்வார் பாசுரப்படி நான்முகன் செஞ்சனயான் போன்றவர்கள் கூட இவரின் தன்மையை யார் தான் அறியப் போகிறார்கள். அபிதித விபாய என்று மந்திரமாம். பெருமானுக்கு அர்ச்சனை பண்ணும் போது இப்படி அர்ச்சனை பண்ணுங்கள். அபித்த விபாயா-அறியப்பட்ட ப்ரபாவம்
அபிதித ப்ரொபவமாய் அதைத்தான் இந்த இடத்தில் அதீந்தர: ஆக இந்திரனுக்கு தம்பியாக பிறந்ததாலும் தான் தன் செயல்பாட்டினால் இந்திரனை ரொம்ப தூரம் தாண்டியவர் என்றாயிற்று. இந்திரன் ப்ரஹ்மனுக்கும் முதலானவர். இந்திரனாக இருந்தால் அவனுக்கு தலைவனாய் தேவர்கள் அத்தனை பேரையும் ப்ரம்மாவாக இருந்தாலும் இவர்கள் அனைவரையும் படைக்கக் கூடிய தலைவராக திகழ்கிறார். அதீந்த்ர : வாமன மூர்த்தியின் அவதாரம் முற்றுப்பெற்றது.
160 வது திருநாமம் ஸங்கரஹ - பக்தர்களால் ப்ரயத்ப்பட்டு ரொம்ப சிரமப்படாமல் அடைந்துவிடலாம். அப்படி உண்டானால், இப்போது தான் கூறியது பெருமாள் எவ்வளவு என்று தெரியாத அளவிற்கு அவர் உயரத்தில்
அளக்கிறார்..அவரை ஸங்கரஹித்து தெரிந்து கொள்ள முடியுமாவென்றால் தெரிந்து கொள்ளத்தான் தன் வடிவத்தையே மாற்றிக் கொள்கிறார் .வேதாந்த தேசிகர் சாதிக்கும் போது விக்ஸோஜித்... என்று துவங்கும் ப்ரமாணப் படி பெருமாள் ஒரு மான்தோல் மரவுரி எடுத்தாராம். பிராட்டி தன் திருமார்பில் எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் தான் ப்ரஹ்மச்சாரியாய் போகும் போதும் பிராட்டி பெருமாள் திருமார்பை விட்டு அகலாமல் இருக்கிறார் அவள் வெளியில் தெரியாமல் இருக்க மான்தோல் மரவுரி போர்த்திக் கொண்டார் . அகலகில்லேன் இறையுமென்று... நிதிய வேஷா. ... ஸ்ரீ அறபாயின்..பகவத் நாராயண ..... என கத்ய த்ரயத்தில் சாதித்தது போல் ஸ்ரீரங்கநாச்சியாரை சரணாகதி பண்ணிவிட்டு பின் திருவரங்கநாதனை சரணாக தி அடைகிறார். மான் தோலால தன்னைமூடியதற்கு நித்ய அநபாயினியான பிராட்டி காரணம் வினவ, அந்தப்புரமாக இருப்பதால் திரை போடனும் என்று பெருமாள்கூறினார். மேலும் இவள் கடாக்ஷம் பட்டால் மஹாபலியிடமிருந்து சொத்தை வாங்க முடியாத காரணத்தாலும் திரை போட்டு மூடினார். நித்யக்ரஹஸ்தனான பெருமான் ப்ரஹ்மசாரியாய் தன்னை குறைய விட்டுக் கொண்டு குள்ளமான வடிவத்தில் தன்னை குறுக்கிக் கொண்டார் என்று பார்க்க முடிகிறது. இது அத்தனையும் நாம் அறிய முடிகிறது. ஸங்கரஹ: பக்தர்களால எளிதில் பிடிக்க முடிகிறது என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
Sugar 10 namangal irukkum.
நிறைவுப்பகுதி -
கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் விஷ்ணுவின் திருநாம விளக்கத்தை
விபுலமாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து சில -
திரிவிக்ரம திருவடி - உலகம் அளந்த பொன்னடியாய் தன்னையே கொடுத்தார் என்று கூறி இத்துடன்161 ஸர்க..திருநாம விளக்கம் முற்றியது. 162 - திருதாத்மா - ஏவம் கர்மதாமன த்ருதாத்மா ....கண்ணேதி.. இந்த பெருமாமேலேயே ஆத்மாக்கள் அனைவரும் தாங்கப்படுகின்றனர். முதலில் கஸ்யபர் அதிதியின் ஆத்மாக்களை தாங்கினார். திதியின் குழந்தைகளான மஹாபலி போன்றோர் ஜெயித்துக் கொண்டே போகிறார் என்று தானே கஸ்யபர் ப்ரார்த்திக்க அதிதிகஸ்யபருக்கு முதலில் ஆத்மாவை இருக்க வைத்தார். பால் வார்த்தார் என்ற படிஅவரே பாலாக பிறந்தார். தன்னையே அவர்களுக்கு கொடுத்து அதனால் அவர்களையே ரக்ஷித்து கொடுத்தார். அதோடு மட்டுமில்லாமல் ஆத்மதா பலதாக: தன பக்தர்கள் அனைவருக்கும் தன் ஆச்சரியமான சேஷ்டிதங்களை கொடுத்தார். த்வம் நிர்மிதா .....என்ற ப்ரமாணப் படிகூரத்தாழ்வான் பகவானை ஒரே கேள்வி கேட்கிறார். ஒருவர் சொத்தை மற்றொருவர் தூக்கிக் கொண்டு போகிறார் என்றால் அவரை 12 தடவை ப்ரதக்ஷிணம் பண்ணி போன்ற சாத்வீக முறையிலா மீட்க முடியும்? அடித்து பிடுங்குகிறோம் அல்லவா? ஆனால்
பெருமாள் ப்ரளயத்தின் போது
தன் வயிற்றிற்குள் அனைத்தும் வைத்து ரக்ஷித்து பின் ப்ரளயம் முடிந்த பின் உமிழ்கிறார். இவர் தான் ஜகத்தை முழுவதும் சிருஷ்டி பண்ணுகிறார். த்வம் நிர்மிதா... உன்னால் படைக்கப்பட்ட இந்த உலகத்தை உன் சொத்தாயிருக்கும் 3லோகத்தை ஒருவன் அபகரித்துக் கொண்டு போனால் நீ பிச்சை எடுத்து மீட்டுக் கொண்டு வருவாயாம். இதில் ஏதோ ஒரு ரகசியமிருக்கிறது. உலகம் உன்னுடையது என்று சொன்னால் அதில் ஒரு குறை வந்து விடும் வேதத்திற்கு சரித்திரத்திற்கு பேச விஷயம்ஒன்றும் கிடையாது. ஆக வேதத்தின் வாயை மெல்லுவதற்கு அவல் கொடுத்தார். தனைதை தானே பக்தர்களுக்கு கொடுத்து அந்த ஆத்மாக்கள் எல்லாம் தரித்து வைத்திருக்கிறார். எனக்கே தன்னை தந்த கற்பகம் ...- என ஆழ்வார் பாசுரத்திற்கு விளக்கத்தை அளித்து ஆக எதை கேட்டாலும் கொடுப்பார். நீயே வா என்றாலும் பரம சந்தோஷம். தமக்கே தம்மை நல்கும் தனி பெரும் பதத்தை வாலி கூறினான். தன் அடியார்களுக்கு தன்னையே கொடுக்கிறார் .ஆக இம்மைக்கும் மருந்து ஏழேழு லோகத்திற்கும் மருந்து இந்த ராமநாமம். இந்த ராமநாமத்தை கண்ட பின் என்னை ஏன் எடுத்து விட்டாய் என வாலி கேட்கிறான். ஆத்மாக்கள் அனைத்திற்கும் தன்னையே பாலாக தேனாக கொடுத்து அடியார்களை தரிக்கை பண்ணுகிறார் என்று கூறி 162வது திருநாம விளக்கத்தை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.