07 OCT 2024 I திபா 111 I ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • பதிலுரைப் பாடல்
    திபா 111: 1-2. 7-8. 9,10c (பல்லவி: 5b)
    பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.
    அல்லது: அல்லேலூயா.
    1
    நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
    2
    ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். - பல்லவி
    7
    அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை.
    8
    என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. - பல்லவி
    9
    தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது.
    10c
    அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி

Комментарии •