பகவானுக்கு எது அழகு? | U Ve Velukkudi Krishnan | Namangal Ayiram -28 | Bakthi
HTML-код
- Опубликовано: 9 сен 2022
- #KumudamBakthi #velukudikrishnan #velukudikrishnaswamigal #velukudukrishnanspeech
Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
email: kumudambakthi2021@gmail.com
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
Subscribe to SNEGITHI
Also, Like and Follow us on:
Facebook ➤ /
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ /
Website ➤ www.kumudam.com
SnehidhiMagazine
/ @kumudambakthi
/ %e0%ae%95%e0%af%81%e0%...
ஓம் நமோ நாராயணா கோவிந்தா 🙏 கேசவா மாதவா ஸ்ரீ மன் எம்பெருமான் அழகோ அழகு 🙏🙏🙏. ரங்கா
வணக்கம் சாமி நன்றி ஐயா நன்றி மேலும் 🌺🌺🌺🌺🌹
🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS
நன்றி.. நமஸ்காரம்.. 🌹🌹🙏🙏
Adiyen RAMANUJAR dasi 🙏🙏🙏 Guruji Namskaram 🙏🙏🙏 Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
தன்யோஸ்மின் சுவாமி 🙏
🙏🙏🙏🙏
பெருமான் அருளுக்கு பாத்திரமானேன் சுவாமி நன்றிகள் பல பல
Swamikku Pallaandu Pallaandu 🙏🙌
Hare Krishna
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
Mei marrandhu vittadhu swami, Ananthakotti namaskaram 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
🙏 thank you
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Thank you
யசோதாயின் அனுபவம் ரசமானது அடியேன் பாக்கியம் 🙏🙏🙏🙏🙏
Namaskaram
Om namo bagavadhe vasudevaya
முதல் பகுதி -
இப்பகுதியில் 22வது நாமம் முதல் 26வது நாமம் வரையிலான திருநாமங்களுக்கு அத்புதமாய் தன் நிரதிசய ஞானத்துடன் சாதித்ததிலிருந்து-
22வது திருநாமம் - ஸ்ரீமான் - நாரஸிம்ஹ வ பு ஸ்ரீமான் மஹாலக்ஷ்மியுடன் இணைத்து அழைக்கப்படுபவர். அஹோபிலம்-அஹோபலம். திருமங்கை ஆழ்வார் அங்கண் ஞாலம்...என்ற பாசுரத்தில் சிங்கவேள் குன்றமே என போற்றியதையும், அஹோபிலே காருட சைல மத்யே ஸ்லோகத்தில் லக்ஷ்ம்யா ஸமாலிங்கத வாம பாகம் என்றபடி தனது இடப்பாகத்தில் லக்ஷ்மியுடன் சேர்ந்து கடாக்ஷிப்பதையும் ஸ்வாமிகள் நினைவு கூர்ந்தார். இதைத்தவிர 180 மற்றும் 222வது திருநாமங்களும் "ஸ்ரீமான் " திருநாமத்தை குறிக்கிறது என்றார்.
23வது திருநாமம் - கேசவ - நாரஸிம்ஹ வ பு ஸ்ரீமான் கேசவஹ.. ப்ரஸததி கேச பாச யுக்த: அழகான கேஸத்தை கொண்டவர். பெருமாளின் எல்லா அவயங்களை விட அழகான கேசத்தை கொண்ட பெருமாளின் திருக்குழலே ஈர்க்கின்றன என்றும் என் ராமன் எத்தனை அழகு என சீதை ஹனுமனிடம் வினவும்போது, நவவியாகரண பண்டிதரான ஹனுமன் மீமாம்ஸம், ந்யாய சாஸ்திரத்தை கூட எளிதில் கூறி விடலாம். ராமனின் திருமுக மண டலத்தையும் அவரின் சௌந்தர்ய லாவண்யாதிகளை எங்கனம் வர்ணிப்பது என ஹனுமன் தட்டு தடுமாறி நா தழுதழுக்கிறது என நின்றதையும் ," ராம கமல பத்ராக்ஷ ஸர்வஸத்வ மனோஹர: "
என கொண்டாடும்படியான ஸர்வலக்ஷணங்களுக்கு இலக்காய் இருப்பவர் என்றார். மேலும் குழலின் பஞ்ச லக்ஷணங்களை விளக்கும் வகையில், குழல் என்றால் அது சுருண்டு, நீண்டு, செறிந்து, நெய் தடவியது போல் பளபளவென கறுத்து, கடை சுருண்டு காணப்படுவதையும் மேலும் கண்ணனின் குழல் அழகை உயர்த்தியாய் குறிப்பிடும் வகையில் யசோதை கண்ணனுக்கு குழலை முன்புறம் இழுத்து முடித்து, பின்புறம் குழல் பின் தாழவிட்டு - கண்ணனின திருமுக மண்டலத்திற்கும் அவன் கேசத்திற்கும் வேறுபாடே தெரியாத அளவுக்கு இரண்டும் கறுப்பு வர்ணத்தை ஒத்து இருந்ததையும், இந்த சிகை அலங்காரத்தை யசோதை முடித்து கண்ணனை மாடு மேய்க்க அனுப்பும் படலத்தை அருமையாய் ஸ்வாமிகள் சாதித்து, இதற்கு உவமானமாய் ஆழ்வார்கள் உதாஹரித்த காளராத்ரி அமாவாசை இருட்டை ஆலையில் கொடுத்து நூலாக்கி அதில் வரும் வெள்ளை பகுதியை விலக்கி, நல்ல கறுப்பு பாகத்தை பார்த்தால் அது கண்ணனின் திருக்குழலுக்கு ஈடாகாது. அந்த அளவுக்கு க...றுப்பு. குழல் அழகின் சீர்மையை விவரித்தார். அது போல் ஒவியர் தான் வரைய முற்படுமுன் மயில் பீலியால் சரிசெய்து வர்ணத்தை தீர்மானிப்பது போல் பிரஹ்மா தன்மயில் பீலியால் தீட்ட அதுவே பெருமாளின இரு புருவமாயிற்று எனக் கூறி பின் குழலின் கேச பாகத்தை வர்ணித்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
Namaskaram . Om Namo Narayana . unable to view episode 27 . can anyone share the link pls .
Bhagavanai nera partharpol sollugireergala.
நிறைவுப் பகுதி-
24 -வது திருநாமம். புருஷோத்தம:
புருஷ-ஜீவாத்மா உத்தமர் - ஜீவாத்மா அனைவரையும் விட சிறந்தவர். கண்ணன் கீதையில் 15வது அத்யாயத்தில் சாதித்தது போல் அசேதனத்தை காட்டிலும் வேறுபட்டவர். புரி சேததி புருஷ: பக்தாத்மா, முக்தாத்மா, நித்யா தமா போன்ற பதங்களின் அர்த்தங்களை
தனித்தனியாய் அ ர்த்தித்து பெருமான் இத்திரி வித ஆத்மாக்களை விட உயர்ந்தவர் என்றார்.புருஷ: ஜட பொருள் அசேதனத்தை காட்டிலும் வேறுபட்ட வர்
உத்புருஷ: பக்த ஜீவர்களைக் காட்டிலும்
மாறுபட்டவர். உத்தரபுருஷன் - முக்த
ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்
உத்தம புருஷன் - நித்யர்களான கருடன், ஆதிசேஷன, விஷ்வக்ஸேனர் போன்றவர்களைக் காட்டிலும் மிக உயர்ந்தவர். அதாவது பக்த, முக்த|நித்யா ஆத்மாக்களைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தவர். அதாவது அஜித், முக்த, நித்ய விலக்ஷணர்களை விட இத்திரி வித சேதனர்களை விட உயர்ந்தவர், அசேதனத்தை காட்டிலும் மிக உயர்ந்தவராய் புருஷோத்தமராய் திகழ்கிறார் என்பதே இத்திருநாமத்தின் விளக்கம் என அறுதியிட்டார். மற்றவைகளால் தாங்கப்படுபவர். பெருமாள் தாங்குபவர்- பாரனாது பூதப்ருது, அனைத்திற்கும் ஸ்வாமியாய விளங்குபவர் . எங்கும் வியாபிக்கிறார். ஸ்வாமியாய் திகழ்கிறார். சேதன அசேதனங்களை தன் சொத்தாக கொண்டவர். ஆக, தாங்குபவராய், ஸர்வ வியாபத்துவத்துவத்துடன் ஸ்வாமியாய் நிலை நிறகிறார். என்னை அஜனாய், அனாதியாய், புருஷோத்தமனாய் அறிந்து பக்தி செய்பவன் - த்யானம் செய்பவனுக்கு அடுத்த பிறவி என்று ஒன்று கிடையாது என்பதையும் திருநாம விளக்கமாய் சாதித்தார்.
25 வது திருநாமம். ஸர்வ: ஸர்வஸிவஸ்தானு நீ திரவ்யய: அனைத்து மே சிவனைக் குறிக்கும் நாமங்கள். சிவன், இதர தேவதைகளையும் தன் சரீரபாய் கொண்டவர். எங்கனம் ஞானமுள்ள ஆத்மா இச்சரீரத்தை நிர்வஹித்திறதோ, அது போல் ஜித், அஜித்த்தை சரீரமாய் கொண்ட பெருமான் அனைத்தையுமே நிர்வஹிக்கிறார். ஸர்வ: நம்மை நடத்துகிறார். ஸர்வாதிகாரியாய் ஒரே ஆட்சியாளனாக நம்மை அவர் வசம் வைத்து பின் தேவையான போது கயிறு போல் நம்மை விட்டு பின் இழுத்துத் கொள்கிறார். ஸர்வ : அனைத்தையும் அறிபவர். தன் கண்முன் அனைத்தையும் பார்க்கிறார். ஸர்வ வியாபகத்துவம் - எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் நம் ஆத்மாவாய் நிலை நின்று, தன் சரீரமாகிய ஜித், அஜித்தை நடத்துகிறார். ஸர்வ : 26வது
திருநாமம் எங்களம் நம் சரீரத்தின் அழுக்கை ஆத்மாவின் ஞானத்தால் அறிந்து போக்கிக் கொள்கிறோமோ அது போல் பெருமான் ஆத்மாவாய் நிலை நின்று தன் ஞானத்தால், அனைத்தும் அவர் சரீரமான ஜித் அஜித்தின் அழுக்கை போக்குகிறார். இப்பகவானுக்கு இந்த ஜீவாத்மாக்கள் சரீரமாய் இருப்பதால், தன் சரீரத்தின் அழுக்கை பெருமாள் போக்குகிறார். எனக் கூறி 26வது திருநாமத்தின் விளக்கத்தை அத்புதமாய் பூர்த்தி செய்தார். ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏